திங்கள், 8 ஜூலை, 2013

பரிதி இளமைவழுதி : அம்மாவை பிரதமர் பதவியில் உட்கார வைப்போம்.

சென்னை அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் பா.வளர்மதி தலைமை வகித்தார்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் பெரிய அளவில் ஜெயலலிதா படம் அச்சிட்ட டிஜிட்டல் பேனர் அமைத்திருந்தனர். அந்த பகுதி முழுவதும் பேனர், கொடி, தோரணங்கள் கட்டி அமர்க்களப்படுத்தியிருந்தனர்.
திமுகவைவிட்டு சமீபத்தில் விலகி அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி இந்தக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில்,
நான் ஒருவித குற்ற உணர்வோடுதான் இந்த மேடையில் நிற்கிறேன். அதிமுகவை எதிர்த்து இதற்கு முன்பு நான் பேசினேன். நான் ஏற்படுத்திய காயங்களுக்கு நானே மருந்து தடவும் பிராயசித்தத்தை செய்யவே இப்போது புறப்பட்டிருக்கிறேன்.


இந்திய நாட்டின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்க போகிறவர் நம் அம்மா. இந்த நாட்டை ஆளக்கூடிய ஆற்றல், வல்லமை படைத்தவர். அவரை பிரதமர் பதவியில் உட்கார வைப்போம். அதற்கு வருகிற மக்களவை தேர்த-ல் 40 தொகுதிகளிலும் வெற்றி கனியை அவர் காலடியில் சமர்ப்பிப்போம். அதற்காக உழைக்க நானும் புறப்பட்டுவிட்டேன். தமிழகம் முழுவதும் சுற்றி மேடைகளில் பேச ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை தேதி கொடுத்திருக்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை: