வெள்ளி, 12 ஜூலை, 2013

சிறையில் அல்லது போலீஸ் காவலில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டி இடமுடியாது !

புதுடில்லி: "சிறையில் அல்லது போலீஸ் காவலில் இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
"குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற உடனேயே, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவியை ரத்து செய்யலாம்' என, சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், குற்றப் பின்னணி உடையவர்கள், பார்லிமென்ட் மற் றும் சட்டசபைகளில் நுழைவதைத் தடுக்கும் வகையில், நேற்றும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. "போலீஸ் காவலில் இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' என, பாட்னா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தேர்தல் ஆணையமும் மற்றும் சிலரும், அப்பீல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் பட்நாயக் மற்றும் முகோபாத்யாய் அடங்கிய, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு விவரம்:  எனவே வெளியில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள் உத்தமர்கள் (முக்கியமாக நீதிபதிகள் கே ஜி பால கிருஷ்ணன், தினகரன் ராமசாமி போன்றவர்கள்)

சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களோ அல்லது போலீஸ் காவலில் இருப்பவர்களோ, சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாது. ஓட்டுப்போட உரிமையுள்ளவர் மட்டுமே, தேர்தலில் போட்டியிட முடியும். சிறையில் இருப்பவர்களும், போலீஸ் காவலில் இருப்பவர்களும், ஓட்டுப் போடும் உரிமையை இழந்து விடுகின்றனர். அதனால், அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவம் சட்டம் பிரிவு, 4 மற்றும் 5ல், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவோருக்கான தகுதி பற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒன்று, தேர்தலில் போட்டியிடுபவர், வாக்காளராக, அதாவது ஓட்டுப் போட தகுதி உடையவராக இருக்க வேண்டும் என்பது. அதே சட்டத்தில், பிரிவு, 62 (5)ல், "ஒருவர் குற்ற வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலோ அல்லது போலீஸ் காவலில் இருந்தாலோ, அவர் எந்தத் தேர்தலிலும் ஓட்டுப் போட முடியாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மூன்று பிரிவுகளையும் சேர்த்துப் பார்க்கும் போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களோ அல்லது போலீஸ் காவலில் இருப்பவர்களோ, தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே சரியானது. "ஓட்டுப் போட உரிமையில்லாதவர், வாக்காளர் அல்ல. அதனால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது' என, பீகார் ஐகோர்ட் அளித்த தீர்ப்பு சரியானதே. அதில், எந்த குறைபாடும் இல்லை. இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: