சனி, 13 அக்டோபர், 2012

மின்வாரிய பொறியாளரின் காம களியாட்டம்

வால்பாறை: நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து, அதை, "லேப்-டாப்' மற்றும் சி.டி.,யில் பதிவு செய்து, ரசித்து வந்த, 57 வயதான மின் வாரியப் பொறியாளரை, போலீசார் கைது செய்தனர். பொறியாளரின் காம லீலைகளை அறிந்த போலீசார், அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள, அட்டகட்டி, அப்பர் ஆழியாறு மின் வாரிய அலுவலகத்தில், உதவி மின் பொறியாளராக பணிபுரிந்தவர், சுப்பிரமணியம், 57. இவர், மின் வாரிய அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரியும் கண்ணம்மாள், 44, என்பவருக்கு, "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்துள்ளார். சுப்பிரமணியத்தின் ஆசை வார்த்தைக்கு அடி பணியாத கண்ணம்மாள், வால்பாறை போலீசில் புகார் செய்தார்; மின்வாரிய அதிகாரி என்பதால், சுப்பிரமணியத்தை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதன் பிறகும் கண்ணம்மாளுக்கு, செக்ஸ் டார்ச்சரும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த கண்ணம்மாள், கோவை எஸ்.பி.,யிடம் புகார் மனு கொடுத்தார். எஸ்.பி., அலுவலகத்திலிருந்து வந்த உத்தரவை அடுத்து, கடந்த மாதம், 21ம் தேதி, சுப்பிரமணியத்தை கைது செய்த போலீசார், வழக்கு பதிந்தனர். இதையடுத்து அவர், பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். சுப்பிரமணியத்தின் பின்னணியை புரட்டிய போலீசாருக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.

சுப்பிரமணியத்திடம் இருந்து, போலீசார் கைப்பற்றிய, அதிநவீன, "வீடியோ கேமரா' மற்றும் "லேப்-டாப்'பில், 13 வயது முதல், 50 வயது நிரம்பிய பெண்களுடன், பல்வேறு கோணங்களில், சுப்பிரமணியம் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள், பதிவாகி இருந்தன. மேட்டுப்பாளையம் அருகே உள்ள, பில்லூர் மின்சார வாரிய கட்டுமானப் பிரிவில், சுப்பிரமணியம் பணிபுரிந்தபோது, அங்குள்ள ஓய்வு விடுதியில், பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதுதவிர, அங்குள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும், "செட்டில்மென்ட்' பகுதிக்குச் சென்று, பெண்கள் குளிக்கும் பொது அறையில், ரகசிய கேமராவை பொருத்தி, அந்தக் காட்சிகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை, வாடிக்கையாக வைத்துள்ளார். மேட்டுப்பாளையத்தில் இருந்து, புரோக்கர் மூலம், கல்லூரி மாணவியரை வர வழைத்து, உல்லாசமாக இருந்ததும், "லேப்-டாப்'பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது, "காம வலையில்' பல குடும்ப பெண்களும் சிக்கி உள்ளனர். இதுகுறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சொந்த கிராமத்திலும்...:

சுப்ரமணியத்தின் சொந்த ஊர், திருப்பூர் மாவட்டம், கொமரலிங்கம் கிராமம். இவரின் மனைவி சித்ரா. இவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும், சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். சுப்பிரமணியத்தின் தகாத நடவடிக்கைகளால், அதிருப்தி அடைந்த சித்ரா, கடந்த ஏழு ஆண்டு முன், சுப்பிரமணியத்தைப் பிரிந்து சென்று விட்டார்; தற்போது, மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சொந்த கிராமத்தில், விதவை பெண் ஒருவருடன் சுப்பிரமணியத்திற்கு தொடர்பு ஏற்பட்டது. விதவை பெண்ணின் குடும்பத்திற்கு, பண உதவி உட்பட, பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இதைப் பயன்படுத்தி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விதவை பெண்ணின் மகளை, காடம்பாறைக்கு அழைத்துச் சென்ற சுப்பிரமணியம், மின்வாரிய ஆய்வு மாளிகையில், அப்பெண் குளிக்கும்போது, படம் பிடித்துள்ளார். இதுகுறித்து, தன் உறவினர்களிடம் அப்பெண் கூறியுள்ளார். இரு தரப்பினரும், ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பஞ்சாயத்து பேசப்பட்டு, விஷயம் மூடி மறைக்கப்பட்டது. இந்நிலையில், சுப்பிரமணியத்தின் தொல்லை தாங்க முடியாத விதவைப் பெண்ணும், அவரின் மகளும், ஊரை காலி செய்து விட்டனர். இப்பிரச்னைக்குப் பின், சொந்த கிராமத்திற்கு, சுப்பிரமணியம் செல்வதில்லை.

கருத்துகள் இல்லை: