புதன், 10 அக்டோபர், 2012

காதல்..தங்கையைக் கொலை செய்த அண்ணன்! சகோதர பாசமாம்

டெல்லி: தங்கை காதலித்து வருவது பிடிக்காத ஒரு பிளஸ் ஒன் மாணவர் தங்கையை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டார்.
டெல்லியைச் சேர்ந்தவர் சுஜீத். 18 வயதான இவரது தங்கை பெயர் லட்சுமி. இருவரும் பிளஸ் ஒன் படித்து வந்தனர். லட்சுமி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இது சுஜீத்துக்குப் பிடிக்கவில்லை. தங்கையிடம் காதலை விட்டு விடுமாறு கூறியுள்ளார். ஆனால் அதை லட்சுமி ஏற்கவில்லையாம்.
இதனால் கோபம் கொண்ட சுஜீத், தனது தங்கையை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டார். பலமுறை கத்தியால் குத்தியதால் லட்சுமியின் உடல் ரத்தக் கோலமாக மாறிப் போனது. பின்னர் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார் சுஜீத்.
போலீஸார் சுஜீத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: