வெள்ளி, 29 ஜூன், 2012

742 இடங்களில் 678 பேர் ஒடுக்கப்பட்டோர்!மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீட்டின் சாதனை

 குலக் கல்வித் திட்டத்தை ஒழித்து, பச்சைத் தமிழர் காமராசரை ஆட்சியில் அமர வைத்ததன் பலன் வீண் போகவில்லை. 1954 ஆம் ஆண்டில் காம ராஜர் விதைத்த கல்விக் கனவு நனவாகி வருகின்றது. அதற்கு வளம் சேர்க்கும் வகையில் திராவிட இயக்கங்கள் பணியாற்றி வருகின்றன. இதனை பெற்றோர்களும் தமிழக மக்களும் உணர்ந்தால் நன்று.
2012 மருத்துவப்  பட்டப் படிப்பு - திராவிட மாணவர்களின் கல்வி முன்னேற்றம்- ஒரு பகுத்தாய்வு:  தமிழக சுகாதாரத் துறை மருத்துவப் பட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கல்வி வள்ளல் காமராஜர் 1954 ஆம் ஆண்டு  கல்விக்கான அடித்தளம் இட்டு கலைஞர் நுழைவுத் தேர்வை விலக்கியதிலிருந்து திராவிட மாணவர்கள் தொழிற்  கல்வியில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்து வருகின்றனர். திராவிட இயக்கம் கல்விக்காக பெரு முயற்சி எடுத்ததின் பயனை இன்றைய தலைமுறை மாணவர்கள் அனுபவித்து  வருகின்றனர். முத்தையா முதலியார், பனகல் அரசர், பிட்டி தியாகராயர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றோரின் பங்களிப்பு அளப்பரியது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்களிப்பு மகத்தானது அல்லவா!
திராவிடர் கழகத்தின் போராட்டங்கள் அளப்பரியன அல்லவா!
இந்த ஆண்டின் தரவரிசைப் பட்டியலை ஒரு ஆவணமாகக் கொண்டு இந்த பகுத்தாய்வு மேற்க் கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 27877
மருத்துவப் படிப்பு இடங்கள்            2395
இட ஒதுக்கீட்டு இடங்கள் 69 சதவீதம்        1653
பொது இடங்கள்                        742
200 க்கு 200 பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 16 முதல் மாணவர் பிற்படுத்தப் பட்டப் பிரிவை சேர்ந்த கௌதம் என்பவர்
இந்த பதினாறு மாணவர்களில்
பிற்படுத்தபட்டோர்    10
தாழ்த்தப்பட்டோர்     2
பொது     2
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்     1
தாழ்த்தபட்டோர்,  அருந்ததியினர்    1
பொது இடங்களான 742 -இல் 678 இடங்களையும் திராவிட மாணவர்களே அடைந்துள்ளனர்.இதனால் மேலும்  678 திராவிட  மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும். இந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று, பொது இடங்களில் சேர்ந்த திராவிட மாணவர்களைப் பாராட்ட வேண்டும். மேலும் திராவிட இயக்கங்களுக்கும் நன்றி கூற வேண்டும்.
நுழைவுத் தேர்வு விலக்கப் பட்டதால் பெரும்பான்மை யான தாழ்த்தப் பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மன வலிமையைப் பெற்றுள்ளனர். நுழைவுத் தேர்வானது  வசதி படைத்தவர்களுக்கும் நகர்ப் புற மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்தது.
ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்து, பச்சைத் தமிழர் காமராசரை ஆட்சியில் அமர வைத்ததன் பலன் வீண் போகவில்லை. 1954 ஆம் ஆண்டில் காம ராஜர் விதைத்த கல்விக் கனவு நனவாகி வருகின்றது. அதற்கு வளம் சேர்க்கும் வகையில் திராவிட இயக்கங்கள் பணியாற்றி வருகின்றன. இதனை பெற்றோர்களும் தமிழக மக்களும் உணர்ந்தால் நன்று.

கருத்துகள் இல்லை: