சனி, 12 நவம்பர், 2011

“குடி”மக்களுக்கு ஓர் நற்செய்தி : பிரம்மாண்டமான ‘எலைட் ஷாப்’ மது பார்களை திறக்கிறது தமிழக அரசு

வீதிகள் தோறும் நமது அரசு மதுபானகடைகளை திறந்து வைத்துள்ளது.   இப்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக கடந்த ஆண்டு 14,965 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும்.     இந்த வருமானத்தை அடுத்த அண்டில் 20 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.

இதையடுத்து  வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும், நவீன வசதிகளுடன், குளிரூட்டப்பட்ட பிரமாண்டமான அளவில் இருக்கும் “எலைட் ஷாப்” என்ற பெயரில் மதுபான கடைகளை திறக்கவும், அது தவிர மாவட்டம் தோறும் ஐந்து இடங்களில் சாதாரண மதுபானகடைகளை திறக்கவும் கோட்ட முதுநிலை மேலாளருக்கு அதிகாரம் அளித்துள்ளது தமிழக அரசு.தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஐந்து சாதாரண டாஸ்மாக் கடைகளையும், இரண்டு “எலைட் ஷாப்” கடைகளையும் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள் மண்டல மேலாளர்கள்.
இந்த “பார்”களில் மற்ற “டாஸ்மாக்” பாரில் இருப்பதை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் “சேவை”க்கட்டணம் வசூலிக்கப்படும் என்று பெயர் சொல்ல விரும்பாத ஒரு அலுவலர் கூறினார்.

பொதுமக்களுக்கு ..ஒட்டு போட்டதும் " அம்மா ஆடு,அம்மி ,மின்விசிறி ...கணணி ..என்று கலக்கிடங்க "....... குடிமக்கள்".. ராமதாசின் சொல் கேட்டிருந்தால் ! ராமதாஸ் அல்லவே "முதல்வர் " குடிமக்கள் குடிமக்களாக இருந்தமைக்கு ..நன்றி தெரிவித்து உக்கபடுதுகிறார் "முதல்வர் " ..டாஸ்மாக் கை " ஆஸ்பத்திரி யாவா மாத்தமுடியும் ? புரிஞ்சுகாங்க சர்ர் !

தமிழகம் ரொம்ப முன்னேற்றம்'''?? வருவாய் முலமே பல டிவி சானல்களை திறக்கலாம்'''' அப்படியானால் தமிழர்களை அடக்கம் பண்ண' சுடளைகலையும் அல்லவா பெரிதாக திறக்கவேண்டும்' அல்லது நவீன வசதியாக எலக்ரிக் சுடளைகலையும் திறக்கலாம்' மரம் மிச்சம்' ஆனால் தமிழகத்தில் அடிக்கடி கரண்ட்

கருத்துகள் இல்லை: