மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் தற்காலிக ஊழியர்கள். அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வரை அரசு அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் பணியாற்றி வரும் மக்கள் நலப் பணியாளர்களின் பதவிகள் கலைக்கப்படுகின்றன. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றன.
பின்னர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களது பணி கலைக்கப்பட்டு விடும். ஏற்கனவே 2 முறை அவ்வாறு அந்தப் பணிகள் கலைக்கப்பட்டன. இப்போது, 3வது முறையாக அப்பணிகள் கலைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சந்திரன் கூறுகையில், ÔÔஅரசின் உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த உத்தரவைக் கண்டித்து, நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்ÕÕ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக