சனி, 12 நவம்பர், 2011

கொல்கத்தா பட விழாவில் தமிழ் படங்களையும் சேர்க்க மம்தா பானர்ஜிக்கு கோரிக்கை


கொல்கத்தாவில் சினிமா படவிழாவில் நடந்து வருகிறது.    கவர்னர் எம்.கே.நாராயணன், பட விழாவை தொடங்கி வைத்து அவர் பேசினார்.
அவர் பேசுகையில், ``இந்த படவிழாவில் வெளிநாட்டு படங்களும், இந்தி படங்களும், தெலுங்கு படங்களும் இடம் பெற்று இருக்கின்றன.
ஆனால் தமிழ் படங்கள் இடம் பெற வில்லை. அந்த படங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் வங்காள மொழிப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என்று முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள் இல்லை: