ஞாயிறு, 6 ஜூன், 2010

ஜிரிவி தொலைக்காட்சிக்கு போட்டியாக நெடியவன் தரப்பினரால் தொலைக்காட்சி

புலிகளின் புலம் பெயர் கட்டமைப்பில் உருவாகியுள்ள பிளவுகளின் விளைவாக ஜிரிவி தொலைக்காட்சிக்கு போட்டியாக நெடியவன் தரப்பினரால் தொலைக்காட்சி ஒன்று ஆரம்பமாகின்றது. இத்தொலைக்காட்சி ரிவி 24 எனும் பெயரில் சுவிற்சர்லாந்து நாட்டிலிருந்து ஆரம்பமாவதாக தெரியவருகின்றது.

இத்தொலைக்காட்சி உருவாவது ஜிரிவி க்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்வின் என்பவருக்கு சொந்தமான ஜிரிவி தமது வியாபாரத்தினை விஸ்தரித்துக் கொள்வதற்காக புலிகளின் தீவிர ஆதரவாளர்களாக தம்மைக் காட்டிக் கொண்டதுடன் புலிகளின் சகல அராஜகங்களையும் நியாயப்படுத்தி வந்திருந்ததுடன் தொலைக்காட்சியின் வருமானத்தின் பகுதி புலிகளியக்கத்திற்கு வழங்கப்படுவதாகவும் ஒர் தோற்றத்தை காட்டி வந்தனர்.

புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட பின்னர் அவ்வியக்கத்தின் புதிய தலைவராக தன்னை அறிமுகம் செய்துகொண்ட கே.பி சார்பானதோர் நிலைப்பாட்டை எடுத்திருந்த ஜிரிவி யுடன் கே.பி யுடன் பதவிப்போட்டியில் நிற்கும் நெடியவன் முரண்பட்டுக்கொண்டார். தொடர்ந்து ஜிரிவி யை கைப்பற்றுவதற்கு பல குறுக்குவழிகளைத் தேடிய நெடியவன் அவை கைகூடாத நிவையில் தற்போது புதியதோர் ரிவி யை தொடங்குகின்றார்.

இத்தொலைக்காட்சியின் உருவாக்கத்தை சகிக்கமுடியாத ஜிரிவி யினர் மிரட்டல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தின் இறுதி யுத்தத்தில் நடந்தவை, ராம் எங்கே? கே.பி சரணடைந்தாரா? கைது செய்யப்பட்டாரா? புலிகளின் பணம் எங்கே சென்றது என்ற விடயங்கை தொடர்சியாக அம்பலப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: