![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZx713_mmlVyVLH70qvprQDFzAL4Baa5DK0zzJaoYBmopM4hDg1ZPYbkKVDvg5-rgb3quqJWpOWLktHguL7YtIdus9UVChMQrZiVpo5Vt70sBTfUPrgmO45uMGP7GKEdqG8eFsaC-nnOQ/s200/Veerasingham-Anandasangaree.jpg)
ஜனாதிபதியுடனான இறுதி சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தாம் தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகள் தொடர்பாகவே பேசியதாகவும் அதுவே தற்போதைய தேவை எனவும் தெரிவித்திருந்தனர். யுத்தம் முடிவடைந்த தறுவாயில் தமிழ் மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் நிறையவே இருந்தது. அத்தருணத்தில் மக்களின் தேவைகள் தொடர்பாக எதுவுமே வாய்திறக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் கஞ்சிக்காக கையேந்தி நிற்கவில்லை எமது மக்களின் அத்தியாவசிய தேவை அரசியல் தீர்வே எனத் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது மக்களின் தேவைகள் ஓரளவேனும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அரசியல் தீர்வு விடயமாக நியாமான கோரிக்கையை முன்வைத்து தீர்வொன்றை நோக்கி நகராமல் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றும் அரசியலையே முன்னெடுக்கின்றனர் என்பதை இலகுவாக உணரமுடிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக