திங்கள், 7 ஜூன், 2010

ராஜபக்சேவை சந்திப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்


இலங்கை தமிழர் மறுவாழ்வு குறித்து தி.மு.க. எம்.பி.க்களுடன் ராஜபக்சேவை சந்திப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு,

டெல்லி மேல் சபை காங்கிரஸ் வேட்பாளராக சுதர்சன நாச்சியப்பனை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். சோனியா இடும் கட்டளையை நாங்கள் நிறைவேற்றுவோம்.

இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில் பிரதமர், இலங்கை அதிபரை சந்தித்து அதுபற்றி
வற்புறுத்துவார். இது தவிர எம்.பி.க்கள் குழுவும் ராஜபக்சேவை சந்தித்து இலங்கை முகாம்களில் இருக்கும் தமிழ் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து வற்புறுத்த உள்ளது.

இதில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி.க்கள் இடம் பெறுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்து வருகிறார். இதுகுறித்து முதல்வர் கருணாநிதியிடம் அவர் பேசி இருக்கிறார் என்றார்.

கருத்துகள் இல்லை: