புதன், 9 ஜூன், 2010

பெரியாரின் கருத்துக்களுக்கு யாரும் தடை விதிக்க முடியாது ஐகோர்ட் தீர்ப்பு

1925 முதல் 1938 வரை குடியரசு பத்திரிகையில் பெரியார் கட்டுரைகளை எழுதி வந்தார். பெரியாரின் கட்டுரைகளை வெளியிடுவதற்காக 4 பாகங்களாக தொகுத்து பெரியார் திராவிடர் கழகம் தயாரித்தது.
பெரியார் கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை வெளியிட திராவிடர் கழகத்துக்குதான் காப்புரிமை உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, பெரியார் திராவிடர் கழகம் வெளியிட இருந்து பெரியாரின் கட்டுரைகளுக்கு இடைக்கால தடை வாங்கியது.
இதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இதில் இடைக்கால தடை நீக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு நடந்த இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சந்துரு கூறியதாவது, பெரியார் சமூக நீதி கருத்துக்களை பரப்பியவர். அவருடை ய அனைத்து கருத்துக்களும் மக்களுக்கு யார் வேண்டுமானாலும் தெரியப்படுத்தலாம். அவருடைய கருத்துக்களை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடுத்து நிறுத்த வேண்டாம் என்றும், பெரியார் திராவிடர் கழகத்துக்கு பெரியார் 

இதை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று (09.06.2010) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த இப்ராகிம் ஹபிபுல்லா, கிருபாகரன் ஆகியோர் 2009ஆம் ஆண்டு நீதிபதி சந்துரு வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும், பெரியாரின் கருத்துக்களுக்கு யாரும் தடை விதிக்க முடியாது என்றும், பெரியார் திராவிடர் கழகம் தொகுத்துள்ள கட்டுரைகளை வெளியிடலாம் என்றும் தீர்ப்பளித்தனர்.

கருத்துகள் இல்லை: