புதன், 9 ஜூன், 2010

"ஈவ்டீசிங்' கொடுமை தாங்க முடியாமல், ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் தற்கொலை முயற்சியில்

நாகர்காவில் : இளைஞர்களின் "ஈவ்டீசிங்' கொடுமை தாங்க முடியாமல், ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில், ப்ளஸ் 2 மாணவன் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே அதங்கோடு மன்னான்விளையை சேர்ந்தவர் சுதர்சனன் (45). இவரது மனைவி ரெஜிலி (39). இவர்களுக்கு மோனியா (17), மஞ்சுஷா (16), சுஜி (11) ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். இதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள், இக்குடும்ப பெண்களை தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்துள்ளனர்.இதுபற்றி களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஐந்து பேரும் வீட்டில் விஷம் குடித்தனர். இதை தொடர்ந்து, ஐந்து பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குடும்ப பெண்களை கிண்டல் செய்த செல்வன், நாகேந்திரன், சிவன், வினு, ஜெகன், நவின்நாதன் ஆகிய ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதில் ப்ளஸ் 2 மாணவரான வினு கைது செய்யப்பட்டார். மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை: