வெள்ளி, 11 ஜூன், 2010

விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் பாதுகாப்புச் செயலாளரினால்


வெலிகந்த, சேருநுவர இடைத்தங்கல் மற்றும் புனர்வாழ்வு நிலையங்களுக்கு சென்ற பாதுகாப்பு செயலர், புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் குறித்து ஆராய்ந்துள்ளார். புனர்வாழ்வு முகாம்களில் பல்வேறு தொழில் பயிற்சிகளை பெற்று வரும் முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் பாதுகாப்புச் செயலாளரினால் வழங்கப்பட்டன.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, கிழக்கு மாகாண பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும், கிழக்கின் உதயம் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: