வெள்ளி, 11 ஜூன், 2010

வடிவேலுவுக்கு சிங்கமுத்து , உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டு எங்களை வடிவேலுவிடமிருந்து பிரித்தது சிங்கமுத்துதான் என்பதை

வடிவேலுவுக்கு சிங்கமுத்து துரோகம் செய்துவிட்டார்: ஜெயமணி 

சிங்கமுத்துவுக்கும், வடிவேலுவுக்கும் பிரச்சனை வந்து இருவரும் பிரிந்து நின்று கோர்ட் படிகள் ஏறிய போது முன்பு பிரிந்து சென்ற அத்துனைபேரும் வடிவேலு பக்கம் வந்துவிட்டனர்.
இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி உசுப்பேத்தி உசுப்பேத்தி விட்டு எங்களை வடிவேலுவிடமிருந்து பிரித்தது சிங்கமுத்துதான் என்பதை இப்போது புரிந்துகொண்டோம்.

அதனால்தான் நல்ல மனிதர் வடிவேலு பக்கம் வந்துவிட்டோம் என்று சொல்லிவருகிறார்கள்.

இந்த நிலையில் வடிவேலுவுடன் கடும் பிரச்சனை செய்து பிரிந்து சென்ற ஜெயமணி மீண்டும் அவருடன் பழையபடி நெருங்கிவிட்டார்.
இது குறித்து ஜெயமணி,   ‘’உலகின் தலை சிறந்த காமெடி நடிகர் வடிவேலு.   அவர் மலை. பிற காமெடியர்கள் மடு. ஆரம்ப காலத்தில் எனக்கும் வடிவேலுவுக்கும் ஆத்மார்ந்தமான நட்பு இருந்தது. எங்களை சிங்கமுத்து சதி செய்து பிரித்து விட்டார்.
என்னைப் பற்றி அவரிடமும் அவரைப்பற்றி என்னிடமும் தப்பு தப்பாக பேசி விரிசல் ஏற்படுத்தினார். பிறகு எங்களுக்குள் பிரிவை உண்டாக்கினார். இப்போது அவரின் உண்மையான முகத்தை இருவரும் புரிந்து கொண்டோம். மீண்டும் நட்பாகி விட்டோம்.

சிங்கமுத்துக்கு வடிவேலு எவ்வளவோ உதவிகள் செய்துள்ளார். அவருக்கு துரோகம் செய்து விட்டார். நல்ல மனிதரான வடிவேலுவை சிங்கமுத்து ஏமாற்றியது உண்மை’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: