வரதராசப் பெருமாளை சாட்சியாக வைத்து சங்கரராமனை கொன்ற சங்கராச்சாரி நிராபராதியாக விடுதலையாகும் போது நம் நாட்டில் ஆசாராம் பாபு மாத்திரம் நீதிமன்றத்தால் யோக்கியனாகி விடுதலை பெற முடியாதா என்ன?பாசம், அயோக்கியத்தனம் இரண்டிற்கும் புகழ் பெற்ற, ஆசாராம் பாபுவின் பெயரை யாரும் மறந்திருக்க முடியாது. ஆன்மீகம், ஆயுர்வேதம், இந்துமதம் எல்லாம் கலந்த, நவீன கார்ப்பரேட் சாமியாராக வலம் வந்தவர் அவர். இந்த பேர்வழியின் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுகளும், கொலைகளும், ஹவாலா மோசடிகளும் ஒவ்வொன்றாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து வெளியானது. பிறகு அவரும், மகன் சாய் நாராயணும் கைது செய்யப்பட்டு  ஜோத்பூர் சிறையிலடைக்கப்பட்டு, தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது. மோடியின் நண்பரான ஆசாராம் பாபுவின் மீதான வழக்குகள், கொலைகார ஜயேந்திரனது வழக்கு போல புஸ்வாணமாகும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.