வெள்ளி, 3 மார்ச், 2023

ஈழத்தமிழர் போராட்டத்தை கலைஞர் எதிர்ப்பாகவே கட்டமைத்து புலிகளுக்கு தவறான வழியை காட்டிய துரோகிகள்" பட்டியலிட்ட தொல். திருமாவளவன்

 இலங்கை தமிழர்களின் போராட்டத்தை  முதலில் இருந்து இறுதி வரை கலைஞர் எதிர்ப்பு பிரசாரமாகவே மடைமாற்றி புலிகளுக்கு தண்ணி காட்டிய குற்றவாளிகள் இப்போதாவது அம்பலமாகிறார்களே!
தமிழ்நாட்டில் புலிகளை அன்றில் இருந்து இன்றுவரை ஆதரிப்பதாக கூச்சல் போடும்,
நெடுமா வைகோக்களை காலம் கடந்தாவது அம்பலப்படுத்திய திருமாவளவன் னுக்கு நன்றிகள்!
சுப.மோகன் ராஜ் : 2009ல் கலைஞர் எதிர்ப்பரசியலை வைத்து ம.நடராசன் ஒரு சூழ்ச்சி விளையாட்டை ஆரம்பித்தார்...
காலந்தோறும் கலைஞர் மீது வன்மம் கொண்ட பழ.நெடுமாறனை முன் வைத்து வைகோ,தா.பா போன்றவர்கள் துணையுடன் அது நடந்தேறியது...
ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கமாக பெயர் பெற்றிருக்க வேண்டிய பழ.நெடுமாறன் தலைமையிலான அணி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கமாக பெயர் பெற்றது முதல் அக்காலங்களில் நடந்தவற்றை தெளிவாக விளக்கியிருக்கிறார் முனைவர் தொல்.திருமா அவர்கள்...
என்ன ம.ந கூட்டணி தேன்நிலவுக்காலம் எல்லாம் முடிந்து தற்போது அவர் சொன்னதில் சற்று வருத்தம்...
பரவாயில்லை காலம் கடந்தாவது சொல்லியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: