வியாழன், 9 செப்டம்பர், 2021

தமிழில் பெயர் வைப்பதை இசுலாம் ஏன் தடுக்கிறது...?

 Saadiq Samad Saadiq Samad :  கேள்வி: தமிழில் பெயர் வைப்பதை இசுலாமிய "மதம்" ஏன் தடுக்கிறது...?
அது அந்த மதத்தின் பாசிச குணமா அல்லது அந்த மதத்தை பின்பற்றும் சிந்திக்கும் திறனற்ற அடிமைகளின் அடிமை குணமா...?
பதில் :  இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களான குரான் மற்றும் ஹதீஸ்களின்  பெயர் , மற்றும் வணக்க வழிபாடுகள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை  
காரணம் முஹம்மதின் ஆரம்ப நோக்கம் அரேபியாவை நோக்கியே இருந்ததால்
 மாற்று மொழியை பற்றி முஹம்மது சிந்திக்கவில்லை.
பின் வந்தவர்களே முஹம்மதின் இஸ்லாத்தை அரபிய பகுதிக்கு வெளியில் கொண்டு வந்தார்கள்
அதன் பிறகுதான் குரான் திருத்தம் ஹதீஸ்கள் குவிப்பு என உரு மாறியது  
இஸ்லாமும் பல வழிகளில் பிரிவும் பிளவும் பட்டது அந்த சூழலில் தான் இஸ்லாத்தை தக்க வைக்க இருக்கும் ஒரே ஆயுதம் அரபி என்ற முடிவுக்கு வந்தார்கள்.

அதனால் வழிபாட்டிற்கு அரபி மட்டுமே என்ற நிலை வந்தது பிற மொழி மக்களை மதம் மாற்றியதால் அவர்களை அடையாளம் காண வழிபாட்டு வரிசையில் பெயர் சூட்டுதலும் கட்டமைக்க பட்டது  
இருந்தும் இந்தோனிஷியா, பங்களா தேஷ் போன்ற நாடுகளில் அரபி இல்லாத பெயர்கள் சூட்டுகிறார்கள் ஆனால் வழிபாடுகளில் அரபி மட்டுமே.
சாதிக் சமத்

கருத்துகள் இல்லை: