திங்கள், 6 செப்டம்பர், 2021

ஆண்களுடன் இனி செக்ஸ் இல்லை - கருக்கலைப்பு சட்டம் ...அமெரிக்க பெண்கள் போராட்டம்!

 News18 Tamil  :      கருக்கலைப்பு சட்டத்தை அரசு திருத்தும் வரையில் ஆண்களுடன் செக்ஸில் ஈடுபடாமல் செக்ஸ் ஸ்டிரைக்கில் பெண்கள் ஈடுபட வேண்டும்
 இனி ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட வேண்டாம் என அமெரிக்காவில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ என்ற பெயரில் இனி ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட வேண்டாம் என நூதன போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பெண்களுக்கு நடிகையும், பாடகியுமான பெட்டே மிட்லர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
செக்ஸ் ஸ்டிரைக் ஏன்?
கருக்கலைப்பு செய்வது குற்றம் என்றும் கருக்கலைப்பு செய்து கொள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதற்காக தடையும் இருந்து வருகிறது.

மேற்கண்ட நாடுகளில் மருத்துவ காரணங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவை பெற்ற பின்னரே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் நடைமுறையில் இருந்து வரும் கருக்கலைப்பு சட்டவிரோதம் என்ற சட்டத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலும் அமல்படுத்தியுள்ளனர்.
டெக்ஸாஸ் மாகாண புதிய கருக்கலைப்பு சட்டப்படி, கருவில் சிசுவின் இதயதுடிப்பு உணரப்பட்ட காலத்திற்கு பின்னர் கருக்கலைப்பு செய்ய அனுமதி கிடையாது.

கருக்கலைப்பு செய்வதாக இருந்தால் அதற்கு முன்னரே செய்து கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதயத்துடிப்பை உணர 6 வாரங்கள் ஆகலாம். இந்த 6 வார காலகட்டத்திற்குள் தாங்கள் கருவுற்றிருக்கிறோம் என்பதே பெரும்பாலான பெண்களுக்கு தெரியாது. அப்படியிருக்கும் போது இவ்வளவு கடுமையான சட்ட நடைமுறை எங்களுக்கு ஒத்துவராது இது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பது பெண்களின் வாதம்.

Also Read: 7 மணி நேரத்தில் 101 பெண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்த அரசு மருத்துவருக்கு சிக்கல்!

சர்ச்சைக்குள்ளான இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பெண்கள் தரப்பில் சிலர் முறையிட்ட நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் அரசின் முடிவில் தலையிட முடியாது என ஒதுங்கிக் கொண்டது. இதன் பின்னர் தாங்களாகவே போராட்டத்தில் குதித்துள்ளனர் பெண்கள். அந்த வகையில் பல இடங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாடகியும், நடிகையுமான பெட்டே மிட்லர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
ட்விட்டர் வாயிலாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கருக்கலைப்பு சட்டத்தை அரசு திருத்தும் வரையில் ஆண்களுடன் செக்ஸில் ஈடுபடாமல் செக்ஸ் ஸ்டிரைக்கில் பெண்கள் ஈடுபட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது துப்பாக்கிகள், பேச்சு, பணம் அல்லது போர் பற்றியது அல்ல. இது பெண்கள், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் உடலமப்பு பற்றியது. பெண்கள் இனப்பெருக்க முடிவுகளை எடுப்பதில் முழு சுதந்திரம் கிடைக்கப்பெரும் வரை செக்ஸ் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம் என நடிகை பெட்டே மிட்லர் கருத்து தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: