புதன், 8 செப்டம்பர், 2021

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய 30 அறிவிப்புகள் .. பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை குறிப்பு

கலைஞர் செய்திகள் விக்னேஷ் செல்வராஜ் : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு சமர்பிக்கப்பட்டது.
 மேலும், பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய 30 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: 259 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும்.

259 கல்லூரி விடுதிகளுக்கு 1 கோடியே 44 இலட்சத்து 40 40 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்படும்.

40 விடுதிகளுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கப்படும்.( சீர் மரபினர் கல்லூரி விடுதிகளுக்கு )

259 கல்லூரி விடுதிகளில் மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு திறன் வளர்ச்சி மேம்பாட்டு கழகம் மூலம் தனித்திறன் மற்றும் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.

இயக்கங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு IFHRMS திட்டத்திற்காக 85 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கணினிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் பயன்பெறும் முதல் பட்டதாரி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை பட்டதாரி என்ற நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும்.

கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டடங்கள் 9 கோடி ரூபாய் கூடுதல் செலவில் உயர்த்தி வழங்கப்படும்.

விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்,காப்பாளிகளுக்கு 83 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.

மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளுக்கு 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் பரிசுகள் வழங்கப்படும்.

20 கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு 23 லட்சத்து 60,000 ரூபாய் செலவில் அங்கீகார அடிப்படையில் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும்.

பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் மாணவ மாணவியர் சேர்க்கைக்கான ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

விடுதிகளில் சிறப்பு பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ள 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

7 மாணவியர் விடுதிகளுக்கு 91 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.

விடுதி மாணவ மாணவியருக்கான பல்வகை செலவின தொகை 4 கோடியே 80 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தப்படும்.

“இட ஒதுக்கீடு குறித்து புரியாமல் பேசுவோருக்கு...” - அதிரடி திட்டங்களை அறிவித்த அமைச்சர் சிவசங்கர்!

234 கள்ளர் பள்ளி கட்டடங்களில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு கழிப்பிட வசதிகள் 4 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

கள்ளர் பள்ளி கட்டடங்களில் 6 கோடி ரூபாய் செலவில் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

15 கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படும்.

அனைத்து கள்ளர் தொடக்கப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் ஆங்கில வழியிலான வகுப்புகள் தொடங்கப்படும்.

கிராமப்புற மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கான வருமான வரம்பு 72 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நலவாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையில் பயன்படும் வகையில் இலவச மின்மோட்டார் உடன் கூடிய தையல் எந்திரம் இலவச பித்தளை தீப்பெட்டி மற்றும் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டங்களுக்கான வருமான வரம்பு எழுபத்தி இரண்டு ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ஆக உயர்த்தி வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய சலவை தொழில் செய்பவர்கள் அதிக எண்ணிக்கையில் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

இலவச பித்தளை தீர்ப்பு பெட்டிகளின் எண்ணிக்கையை 2005 3 ஆயிரமாக உயர்த்தி 48 லட்சத்து 73 ஆயிரம் செலவில் வழங்கப்படும்.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் மற்றும் தனித் திறன் வளர்க்கும் பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும்.

கல்லூரி விடுதிகளில் தேவையை கருத்தில் கொண்டு இரண்டு படுத்தப்பட்டு சீர்மரபினர் பள்ளி விடுதிகள் கல்லூரிகளாக 17 லட்சத்து 93 ஆயிரம் செலவில் நிலை உயர்த்தப்படும்.

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியரின் நலன் கருதி மாநில அரசு திட்டத்தின் கீழ் 2 விடுதிகளுக்கு 6 கோடியே 60 இலட்சம் 54 ஆயிரம் செலவில் புதிய சொந்த கட்டிடம் கட்டப்படும்.

மாநில அளவில் மையப்படுத்தப்பட்ட முறைகள் விடுதிகளுக்கு கான மளிகை பொருட்கள் தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின் படி கொள்முதல் செய்யப்படும்.

சிறப்பாகச் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களால் 50 ஆயிரம் ரூபாய் செலவில் விருதுகள் வழங்கப்படும்.

விடுதி மாணவ மாணவியருக்கு கட்டுரைப் போட்டி விளையாட்டுப் போட்டி போன்ற போட்டிகள் கலை திருவிழா என்ற பெயரில் மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றியும் சமூக நீதி செயல்பாடுகள் பற்றியும் வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி குறித்து பல்வேறு தகவல்கள் புத்தகம் 5 லட்சம் ரூபாய் செலவில் வெளியிடப்படும்.

கருத்துகள் இல்லை: