வியாழன், 9 செப்டம்பர், 2021

தமிழ்நாடு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

மாலைமலர் : தமிழ்நாடு  ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை:  தமிழ்நாடு  ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். இவர் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், புதிய  ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
ஆர் என் ரவி நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பஞ்சாப் மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை: