ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

தமிழ்நாட்டை கொள்ளை அடிக்க ஜாக்கி வாசுதேவ் கன்னக்கோல் காவுகிறான் மக்களே விழித்து கொள்ளுங்கள்

ஜாக்கி தன் மனைவியை கொலை செய்தவர் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-0/p526x296/150371846_1871402219702181_456361879803592067_o.jpg?_nc_cat=109&ccb=3&_nc_sid=730e14&_nc_ohc=SdKWAQ45qS0AX8VzGzO&_nc_ht=scontent-yyz1-1.xx&tp=6&oh=f18461e3c525b6c059983c32b1b5c44c&oe=604DD71D

 

Nata Rajan  :  கன்னக்கோலும் ஜக்கி வாசுதேவ் என்ற திருட்டு பரதேசியும்!
அந்தக் காலத்தில், மிகவும் இருட்டாக உள்ள இரவு நேரத்தில் கொள்ளையர்கள் திருடச் செல்வார்கள். அப்போது,
தாங்கள் எந்த வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தார்களோ, அவ்வீட்டின் சுவற்றில் ஓட்டையிட்டு அதன் வழியாக உள்ளே நுழைந்துசென்று கொள்ளையடிப்பார்கள்.
அவ்வாறு திருடர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க வீடுகளில் உள்ளோர் எச்சரிக்கையாக விழித்திருப்பர். இந்தச் சூழலில் எவ்வாறு வெற்றிகரமாகக் கொள்ளையடிப்பது?
அதற்காக, கொள்ளையர்கள் ஒரு தந்திரத்தைக் கையாள்வார்கள். ஒரு வீட்டின் சுவற்றில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டையிட்டபின், ஒரு கருப்பான பழைய சட்டி அல்லது சிறிய பானையை, ஒரு நீளமான கோலில் மாட்டி மெதுவாக அந்த ஓட்டை வழியே, நுழைப்பர். கன்னங்கரிய அந்த இருட்டில்,

May be an image of one or more people and text

வீட்டின் உள்ளே இருப்போர், திருடன்தான் தனது தலையை நுழைக்கிறான் என்று எண்ணி, தமது கையில் உள்ள கழியால் ஒரே அடியாக வேகமாக அடிப்பர். அவ்வாறு அடித்த அடியில் திருடர்களால் நுழைக்கப்பட்ட பானை சுக்குநூறாக உடையும்.
வீட்டில் உள்ளோர் விழித்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்ட திருடர்கள் உடனே, வேகமாக ஓடித் தப்பித்துக் கொள்வர்.
அந்தத் திருடர்கள் தமது கையிலிருந்த கோல்மூலமாக, அந்த வீட்டின் உள்ளே நுழைத்த சட்டி, பானைகள்தாம் உடைந்து போயிருக்கும். அவ்வாறு திருடர்களால் சட்டி அல்லது பானை மாட்டப்பட்ட அந்தக்கோலைத்தான் கன்னக்கோல் என்று சொல்வார்கள்.
ஜக்கி வாசுதேவ் CNN - News 18 என்ற (ரிலையன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள) தொலைக்காட்சியில் 22.01.2021 அன்று அளித்த பேட்டியிலும் பின்னர் புதிய தலைமுறை தொலக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் கோயில்களைச் சதுர்வர்ண வெறியர்கள் மறுபடியும் கொள்ளையடிப்பதற்கு, தான் ஒரு கன்னக்கோலாக இருந்து செயல்பட்டிருக்கிறார். 1. அரசாங்கம் பொதுமக்களுடைய வரிப்பணத்தில் கட்டிய கோயில்களை, காலங்காலமாக அரசாங்கங்களே நிர்வகித்த கோயில்களை, அரசாங்கத்தின் மேற்பார்வையிலிருந்து விலக்கிச் சதுர்வர்ணக் கூட்டத்தாரிடம் கொடுப்பது கயமைத்தனமான செயலாகும். இவற்றைப் பற்றியெல்லாம் இந்த ஜக்கி வாசுதேவ் என்ற சூத்திரப் பரதேசி கவலை கொள்ளவில்லை.
2. வரலாற்றில் பல அரசியல் சம்பந்தப்பட்ட பயங்கரவாதச் செயல்களுக்கு பிராமணர்கள் பூசகர்களாக இருந்த கோயில்கள் பயன்பட்டுள்ளன. அரசனைக் கோயில் கருவறையில் வைத்துப் பலவிதமான முறைகளில் கொலைசெய்வது எப்படி என்று ஒரு அத்தியாயமே எழுதிவைத்துச் சென்றுள்ளான் சாணக்கியன். கோயில்கள் கொலைக்கூடங்களாக விளங்கின. அது பற்றியெல்லாம் இந்த சூத்திரப் பரதேசி கவலை கொள்ளவில்லை. .
3. பிராமணர்கள் ம்ட்டுமே பூசகர்களாகப் பணியாற்றும் கோயில்கல் அனைத்திலும், பூசகர் பணியிடத்திற்கு அனைத்துச் சாதியினரையும் அனைத்து நிலகளிலும் பணியமர்த்தவேண்டும் என்பது பற்றி இவர் கவலை ஏதும் கொள்ளவில்லை.
4. திருப்பதி கோயில் ஜீயர்கள் கோயிலுக்கு வரும் பணத்திலிருந்து, 1.5 கோடி, 1.2 கோடி ரூபாயைத் தங்களது சம்பளமாக அள்ளிக்கொண்டு போவது பற்றி இவர் எதுவும் சொல்வதில்லை.
5. கோயில்களில் தாய்மொழியில் வழிபாடு செய்யும் அடிப்படை உரிமை பற்றி இவர் ஏதும் பேசுவதில்லை.
6. மதசம்பந்தமான நிகழ்வுகளில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது என்று கூறும் இந்த சூத்திரப் பரதேசிகள், அரசின் செயல்பாடுகளில் மதத்தலைவர்கள் தலையிடுவதைப் பற்றி வாய்திறப்பதில்லை.
இவரைப்போன்ற கன்னக்கோல்கள்தாம் காலங்காலமாக பெருங்கொள்ளையர்களுக்குக் கருவிகளாகக் விளங்கி உதவிசெய்து வந்துள்ளனர்.சதுர்வர்ண அமைப்பு இந்தியாவில் காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கவேண்டும் என்று விரும்பி அதற்கான திசையில், கொஞ்சம்கூட மனச்சாட்சியே இல்லாத, ஒரு கூட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டமும் அதன் செயல்பாடுகளுக்கு ஆதரவு தருபவர்களும்தான் அந்தப் பெருங்கொள்ளையர் கூட்டத்தினர்.
இந்த உண்மைகளை உணராது, இப்படிப்பட்ட சூத்திரப் பரதேசிகள் பலர், மக்கள் நலனைப் பாராமல் தங்கள் சொந்த வளத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சதுர்வர்ணஅமைப்புக்கு மக்களை அடிமையாக்கி, தாமும், கன்னக்கோல் சட்டி பானைகள் போல, விரைவில் அழிந்து போக தாமாகவே முன்வருகின்றனர்.
கோயில் திருடர்கள் மிகப்பெரும் திருட்டு செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்பது அவர்கள் ஊடகங்கள் மூலமாகக் கன்னக்கோல் வைக்கும் இப்படிப்பட்ட திட்டமிடப்பட்ட ஒருசார்புப் பேட்டிகளிலிருந்து மக்களுக்குப் புரியவேண்டும்.
===
பி.கு: சூத்திரன் என்ற இழிசொல்லை நம்மைக் குறிப்பதற்குப் பயன்படுத்தியவர்கள், இன்றும் பயன் படுத்துகின்றவர்கள், பிராமணர்கள். அவர்கள் தம்மை பிராமணர் என்று சொல்லிக்கொள்ளும்போதே நம்மை இழிபிறவியினர், சூத்திரர்கள் என்று கருதுகிறார்கள் மற்றும் சுட்டிக்காட்டுகிறார்கள் என்பது தெளிவாகும். சென்னை உயர்நீதிமன்றத்தின், 1887 ஆம் ஆண்டுத் தீர்ப்பு ஒன்றில், சூத்திரர்களில் துறவிகள் இருந்தால், அவர்கள் பரதேசிகள் என்று அழைக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு விளக்கம் அளித்தவர் நீதிபதி முத்துசாமி ஐயர் ஆவார். (He said that "If an ascetic or a hermit is a Brahmin, he is called a Yati or Sanyasi; if a Sudra, he is called a paradesi" (Giyana Sambandha Pandara Sannadhi v. Kandasami Tambiran - 1887) (Chief Justice. Sir Arthur J. H. Collins and Justice Muthusamy Ayyar) (P - 385 Madras Series Vol .X). எனவே, ஜக்கி வாசுதேவ் அந்த உயர்நீதி மன்றத் தீர்ப்பின்படி ஒரு சூத்திரப் பரதேசிதான். That Mr. Jaggi Vasudev is a Sudra Paradesi is a statement of fact, as per the Court made law.

கருத்துகள் இல்லை: