செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

வைகோ : திமுக இணைந்து போராடுவது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம் .. கோவை நிதியளிப்பு விழாவில்

tamil.samayam.com : சட்டமன்ற தேர்தலுக்காக மதிமுக நிர்வாகிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி வருகின்றனர்.
  • கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 80.88 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது
  • கோவை சித்தாபுதூர் சாலையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் தேர்தல் நிதியளிப்பு விழா நடைபெற்றது. மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  கோவை மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவிடம் முதல்கட்ட தேர்தல் நிதியாக மொத்தம் ரூ.80.88 லட்சம் ரூபாயை அளித்தனர். இதில் அதிகபட்சமாக கோவை மாநகர் மாவட்டம் சார்பாக ரூ.30 லட்சத்து 88 ஆயிரம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மத்தியில் வைகோ பேசியது:

    தேர்தலுக்காக பொதுமக்களிடம் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி மதிமுக தான். மற்ற கட்சிகளுக்கு நிதி வசூலிக்க வேண்டிய தேவையில்லை. அவர்களிடம் நிதி குவிந்து கிடக்கிறது.

    தமிழ்நாட்டின் நன்மைக்காக பாடுபடக்கூடிய கட்சியாக மதிமுக உள்ளது. மீத்தேன், ஸ்டெர்லைட் போராட்டம் உள்ளிட்டவை மதிமுகவால் நடத்தப்பட்டது.

    இந்துத்துவா சக்திகளைத் தடுக்க திமுகவுடன் மதிமுக இணைந்து போராடுவது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். இதன் காரணமாக திமுக கூட்டணியில் உள்ளோம். தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் எந்த பதவியையும் எதிர்பார்த்து கட்சியில் இருக்கவில்லை.

    இந்நிகழ்ச்சியில் இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், பகுதி கழக செயலாளர் வெள்ளியங்கிரி, பொதுக்குழு உறுப்பினர் பயனீர் தியாகு, ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.எம் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை: