வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து- முதலமைச்சர் அறிவிப்பு

சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து- முதலமைச்சர் அறிவிப்பு
maalaimalar :தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

 * கொரோனா ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
* குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.
* சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படும்.
* கூடங்குளத்தில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படும்.
* காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, வன்முறை தொடர்பான வழக்குகள் தவிர்த்து மற்ற வழக்குகள் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: