
போகிறர்கள் ?
வெட்கமாக இல்ல இந்த திருச்சி தி மு க சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு?
சே கட்சிக்கு இப்படியும் துரோகம் செய்ய புறப்பட்டு விட்டார்களே-?
காரி துப்பினாலும் உரைக்காது போல இவனுங்களுக்கு தூதூதூ து


அந்த அடிப்படையில் தற்போது
தன்னைத் தானே சத்குரு என்று சொல்லிக் கொண்டு, காடுகளை அழித்து, யானையின்
வலசைப் பாதைகளை மறித்து, யோகாவின் பெயரால் தமிழக மக்களை ஏமாற்றி, பல ஆயிரம்
கோடிகளை கொள்ளையடித்த கார்ப்ரேட் கிரிமினல் சாமியாரான ஜக்கி வாசுதேவன்,
காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஆரம்பித்து, அதற்காக தமிழ்நாட்டில் உள்ள
பல அரசியல் கட்சிகளின் ஆதரவும் தனக்கு இருப்பது போன்ற தோற்றத்தை
ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றான். இவன் போடும் எச்சிக் காசுக்கு வாலை
ஆட்டிக் கொண்டு நிற்கும் தமிழினத் துரோகிகள் துளி கூட சுயமரியாதை உணர்வு
இல்லாமல் இவனோடு தற்போது கரம் கோர்த்துள்ளார்கள்.
இது
சம்மந்தமாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்தியாவின்
உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும், அதைச் சார்ந்துள்ள
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவிரி கூக்குரல் என்ற
இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். இதன் மூலம்
தமிழகம் மற்றும் கர்நாடகத்தின் காவிரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள
விவசாய நிலங்களில், அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக, கர்நாடக மாநில அரசுகள்
மற்றும் மக்கள் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், 35,00 கி.மீ. தொலைவுக்கு
மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெறவுள்ளது.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில்
காவிரியின் மீது ஜக்கிக்கு அக்கறை இருக்குமானால் காவிரியில் கழிவு நீரைக்
கலந்து அதை மாசுபடுத்தும் சாயப்பட்டறைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு
எதிராகவும், எந்தவித வரைமுறையும் இல்லாமால் நீர்க் கொள்ளையில் ஈடுபடும்
தொழில் நிறுவனங்களுக்கு எதிராகவும், காவிரிக் கரையை ஆக்கிரமித்து அதை
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் துணையோடு பட்டா போட்டு விற்பனை செய்த
ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிராகவும், காவிரி ஆற்றில் கிணறு தோண்டி
மணற்கொள்ளையில் ஈடுபட்டு அதைத் துடிதுடிக்க கொலை செய்த மணற்கொள்ளை
மாஃபியாக்களுக்கு எதிராகவும், காவிரியில் தண்ணீரைத் திறந்துவிடாமல்
அடாவடித்தனம் செய்யும் கர்நாடகாவுக்கு எதிராகவும்தான் இயக்கம் நடத்தி
இருக்க வேண்டும். ஆனால் உண்மையான எதிரிகளுக்கு எதிராக சுட்டுவிரலைக் கூட
நீட்டத் துப்பில்லாத இந்த 420 சாமியார் காற்றில் கம்பு சுற்றிக் கொண்டு
இருக்கின்றார். மண்ணையும் மக்களையும் அழிக்கும் வேதாந்தா போன்ற
பெருந்தொழில் நிறுவனங்களின் ஏவலாளாக வாழ்வதையே தன்னுடைய பிறவிக் கடமை என்று
வாழ்ந்து வரும் ஜக்கி போன்றவர்களால் அது ஒருபோதும் முடியாது என்பதுதான்
உண்மை.

இந்த
மொக்கைப் பேர்வழிகள் வரிசையில் விடுபட்டவர்கள் என்று தமிழ்நாட்டில் உள்ள
எந்தக் கட்சியையும் சொல்லிவிட முடியாது. ஜக்கியைப் பற்றி விமர்சித்த சீமான்
கூட ஒரு சங்கியாக தன்னுடைய ஆதரவை வந்தேறி ஜக்கிக்குக்
கொடுத்திருக்கின்றார். நாய் விற்ற காசு குரைப்பதில்லை என்பது அண்ணன்
சீமானுக்கு நன்றாகவே தெரியும்!
பார்ப்பன
எதிர்ப்பு பேசும் விடுதலைச் சிறுத்தைகள் கூட தன்னை ஜக்கியோடும், அவரது
சித்தாந்தத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி
அடைகின்றது. இன்னும் பெரியாரியக்கத் தோழர்களை மட்டும்தான் ஜக்கியின் ஆட்கள்
அணுகவில்லை என்று தெரிகின்றது.
காவிரியில்
ஒழுங்காக தண்ணீர் வந்தாலே விவசாயிகளின் பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.
ஆனால் டெல்டா விவசாயிகளை விவசாயத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு, மீத்தேன்
திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில்தான் மத்திய அரசு
காவிரியைத் திட்டமிட்டு வறண்டு போக வைக்கின்றது என்ற குற்றச்சாட்டு பரவலாக
உள்ளது. தமிழகத்தின் உணவுத் தேவையில் பெருமளவைப் பூர்த்தி செய்யும் காவிரி
டெல்டாவை அழிப்பதென்பது தமிழர்களை உணவுக்காக கையேந்த வைத்துவிடும்
என்பதுதான் உண்மை.
ஜக்கியின் இந்த 12
ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடும் இலக்கு கூட விவசாயிகளை பரம்பரியமான நெல்
மற்றும் உணவு தானிய உற்பத்தியில் இருந்து வெளியேற்றுவதன் மூலம், அவர்களை
விவசாயத்தை விட்டு அப்புறப்படுத்தவும், தமிழர்களை அரிசிக்காகவும் உணவு
தானியத்திற்காகவும் கையேந்த வைக்கவும், ஜக்கி போடும் சதித் திட்டமாகும்.
ஜக்கியின் இந்தத் திட்டத்தின் பின்னால் நிச்சயமாக கார்ப்ரேட்களின் கை
இருக்கும் என்பது உறுதி.


சுற்றுச்சூழலைப்
பாதுகாப்பது என்பதெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செய்ய
வேண்டிய பணியாகும். அதை ஒரு சாமியார் செய்வதாக சொல்வதே ஒரு மானமுள்ள
அரசுக்கு வெட்கக் கேடானது ஆகும். ஆனால் மானமுள்ள அரசுக்கு நாம் எங்கு
போவது? ஆனால் ஒன்று மட்டும் ஜக்கியால் நடந்திருக்கின்றது, அது தமிழகத்தில்
பல்வேறு அரசியல் கட்சிகளில் ஒளிந்து கொண்டிருந்த சங்கிகளை எல்லாம் நாம்
தற்போது அடையாளம் கண்டிருக்கின்றோம். அந்த வகையில் நாம் ஜக்கிக்கு நன்றி
சொல்லத்தான் வேண்டும்.
- செ.கார்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக