

மத்திய அரசு இயற்றும் சட்டங்கள் சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே மாநிலத்தில் செல்லுபடியாகும். ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில் யார் வேண்டுமானாலும் அங்கு நிலம் வாங்கலாம் என நிலை உருவானது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டரா அரசு ஜம்மு – காஷ்மீரில் நிலம் வாங்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்தநிலையில் தற்போது கர்நாடக அரசு ஜம்முவில் நிலம் வாங்கவுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரவி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் ரவி,
“ஜம்மு – காஷ்மீரில் நிலம் வாங்குவது தொடர்பாக அமைச்சரைவில் முன்மொழிவை
வைக்க இருக்கிறோம். சட்டமன்றத்தில் அனுமதி கிடைத்ததும் மத்திய அரசு மற்றும்
ஜம்மு – காஷ்மீர் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துவோம். ஒப்புதல்
கிடைத்ததும் இரு யூனியன் பிரதேசங்களிலும் முதலீடு செய்வோம். சுற்றுலா
விடுதிகள் அங்கு கட்டப்படும். இந்த முதலீட்டை கர்நாடக மாநில சுற்றுலா
மேம்பாட்டுக் கழகத்திடம் ஒப்படைக்கவுள்ளோம்” என்றார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்ய மற்ற மாநிலங்கள்
ஆர்வம்காட்டாத நிலையில் பாஜக அரசு ஆட்சி புரியும் இரண்டு மாநில அரசுகள்
தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளன. கர்நாடகத்தில் சமீபத்தில்தான்
காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின்னர், எடியூரப்பா
தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக