ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

ரஜனி , மோகன்லால், வைஜயந்திமாலா , வை ஜி மகேந்திரன், நடிகர் தனுஷ்.. சினிமா குடும்ப மாபியா?

Yuva Krishna : சமூகநீதிக் காவலர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி, புகழ்பெற்ற அமெச்சூர் நாடகக் குழுவை நிறுவி நடத்திய நடிகர். அவருடைய சகோதரி வசுந்தராதேவி அந்தகாலத்து புகழ்பெற்ற சினிமா நடிகை. வசுந்தராதேவியின் மகள்தான் தமிழில் இருந்து பாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிய வைஜயந்திமாலா. இவருடைய மகன் சுசிந்தீராவும் நடிகர்தான்.
மகேந்திரனின் அம்மா ராஜலட்சுமி, சென்னையின் புகழ்பெற்ற பத்மாசேஷாத்ரி பள்ளிகளின் நிறுவனர். பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்பாக குமுதம், இந்து பத்திரிகைகளில் பணிபுரிந்த பத்திரிகையாளர் இவர். ராஜலட்சுமியின் பாட்டனார் ரங்கச்சாரி அவர்கள்தான் இந்தியாவில் சென்ஸார் போர்டையே கொண்டுவந்தவர். ராஜலட்சுமியின் சகோதரர் கே.பாலாஜி, புகழ்பெற்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளர். பாலாஜியின் மகன் சுரேஷ்பாலாஜியும் அப்பாவை போலவே புகழ்பெற்ற தயாரிப்பாளர். கே.பாலாஜியின் மகள் சுசித்ரா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். மோகன்லாலின் மகன் பிரணவ்வும் இப்போது நடிகராகி இருக்கிறார். ‘பாபநாசம்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இவர்.
மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா. இவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை மணந்துக்கொண்டு லதாரஜினிகாந்த் ஆனார்.
சென்னையின் புகழ்பெற்ற ஆஸ்ரம் பள்ளியின் நிறுவனர் இவர். லதாவின் மகள் ஐஸ்வர்யா, இளம் நடிகர் தனுஷை மணந்தார். ஐஸ்வர்யாவும் சினிமா இயக்குகிறார். இன்னொரு மகள் செளந்தர்யாவும் தயாரிப்பு, இயக்கம் என்று திரைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்.தனுஷின் அண்ணன், செல்வராகவன், தமிழகத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் மகள் கீதாஞ்சலியை மணந்திருக்கிறார்.

லதாவின் தம்பி ரவிராகவேந்திராவும் நடிகர். அவருடைய மகன் அனிருத், இப்போது பிரபலமான இசையமைப்பாளர். அனிருத்தின் சித்தி மகன் ரிஷிகேஷும் நடிகரே. இவரது அப்பா எஸ்.வி.ரமணன், அந்தகாலத்தில் ரஜினியை பேட்டியெடுத்து தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பிய பத்திரிகையாளர். எஸ்.வி.ரமணின் அப்பா கே.சுப்பிரமணியம், தமிழ் சினிமாவின் ஆரம்பகால இயக்குநர்களில் முக்கியமானவர்.
ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, ஜெமினி - சாவித்திரி தம்பதியரின் மகள் டாக்டர் சாமூண்டிஸ்வரியின் மகன் அருணை மணந்திருக்கிறார்.
தலை சுத்துதா? மன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் என்றுகூட தோன்றுமே? இதெல்லாம் நமக்கு வெளிப்படையாக தெரிந்த லிங்க். வெளிப்படையாக தெரியாமல் படர்ந்த வலை எவ்வளவோ?
வைஜயந்திமாலா, தன்னுடைய சுயசரிதையில் தங்கள் குடும்பத்தை மைசூர் பரம்பரை என்கிறார். புகழ்பெற்ற அறிஞர்களும், அர்ச்சகர்களும் இவர்களது முன்னோர்களாம். இவர்களது முன்னோர் வந்தால் மைசூர் அரசர்களே எழுந்து நின்று வரவேற்பார்களாம். ஒருவேளை புரட்சித்தலைவி அம்மாவும் இதே குடும்பத்தின் ஒரு கிளையில் உதித்தவர்தானோ என்னவோ?

கருத்துகள் இல்லை: