வெள்ளி, 21 ஜூன், 2019

கண்டமங்கலம் அருகே காதலன் கண் முன்பு காதலி பாலியல் பலாத்காரம்

மாலைமலர் : கண்டமங்கலம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த 18 வயது பெண் ஒருவரும், சூரமங்கலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் நல்லூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் பள்ளி நேலியனூர் ரெயில்வே கேட் அருகே உள்ள பள்ளிச்சேரி வயல் வெளியில் இரவு அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் பள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் மதுக்குடித்து கொண்டிருந்தனர். காதல் ஜோடி தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர்.
பின்னர் அவர்கள் 4 பேரும் காதல் ஜோடியின் அருகில் சென்றனர். அவர்களை பார்த்து காதல் ஜோடி அதிர்ச்சியடைந்தது. உடனே அங்கிருந்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த வாலிபர்கள் காதல் ஜோடியை அங்கிருந்து செல்ல விடாமல் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் காதலனை சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து காதலனின் கண் முன்பே அந்த பெண்ணை வாலிபர்கள் 4 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.


அவர்களிடம் இருந்து தப்பி சென்ற காதலன் தனது செல்போன் மூலம் அவரது நண்பரிடம் பேசினார். நடந்த சம்பவத்தை கூறி தனக்கு உதவி செய்யுமாறு கூறினார்.

உடனே அவரது நண்பர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் பெண்ணை பலாத்காரம் செய்த கும்பலை அவர்கள் தட்டி கேட்டனர்.

இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் 2 பேரையும் சரமாரியாக தாக்கி அங்கிருந்து விரட்டினர். அதன் பின்னர் அந்த கும்பலும் அங்கிருந்து ஓடி விட்டது.

பின்னர் பள்ளி நேலியனூர் ரெயில்வே கேட் அருகே உள்ள வயல்வெளிக்கு சென்ற பொதுமக்கள் அந்த பகுதியில் இளம்பெண் ஒருவர் காயங்களுடன் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார்ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இது குறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன், தனி பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான் தலைமையிலான போலீசார் பள்ளிச்சேரி பகுதிக்கு சென்றனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த அய்யனார்(27) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசா ரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: