

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் கிராமத்தில் முத்தையா என்பவருக்குச் சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை ஜேசிபி மூலம் தொழிலாளர்கள் வெட்டி அகற்றிக்கொண்டு இருந்தனர். மரத்தை வெட்டிய பகுதியைச் சமப்படுத்துவதற்காக, அதன் அருகே பள்ளம் தோண்டியபோது,அங்கு,ஐம்பொன் சிலை ஒன்று வெளிப்பட்டது. அதைப் பார்த்த தொழிலாளர்கள் சிலையைத் தோண்டி எடுத்தனர். தொடர்ந்து, அருகருகே, ஒவ்வொன்றாக ஐம்பொன் சிலைகள் வெளிப்பட்டன.
இந்தத் தகவல் அந்தப் பகுதியில் காட்டுத் தீப்போல் பரவியதால், கிராம மக்கள் அனைவரும் அங்கு திரண்டனர். அடுத்தடுத்து சிலைகள் தென்பட்டதால், பிரமித்த கிராம மக்கள் வருவாய்த்துறை மற்றும் தொல்லியல்துறை அதிகாரிகளுக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.



இதுகுறித்து அந்தப் பகுதி கிராம மக்கள் கூறும்போது, “கண்டெடுத்த சிலைகள் அனைத்தும் நாகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமானதாக இருக்கலாம். பாதுகாப்புக்காக, அனைத்தையும் முன்னோர்கள் மண்ணுக்குள் மறைத்து வைத்திருப்பார்கள். மீட்ட அனைத்து சிலைகளையும், நாங்கள் வழிபடும் வகையில் நாகநாத சுவாமி கோயிலுக்கு வழங்க வேண்டும்” என்றனர்.
சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கோங்குடி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமையான 7 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக