சனி, 22 ஜூன், 2019

கள்ளக்குறிச்சி கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்முறை .100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்.. பரபரப்பு


கரும்பு தோட்டம் மிரட்டி வீடியோ
பாலியல் தொந்தரவு tamil.oneindia.com - hemavandhana.: கரும்பு தோட்டத்தில் நாசமாக்கப்பட்ட பெண்கள், ஆபாச வீடியோக்கள் சிக்கின கள்ளக்குறிச்சி: கரும்பு தோட்டத்தில் பெண்களை மிரட்டி நாசம் செய்திருக்கிறார்கள் கேடுகெட்ட பாவிகள்.. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
பொள்ளாச்சி சம்பவத்துல நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் சிக்கியதாக கூறப்பட்டது. ஆனால் அவையெல்லாம் எங்கே போயின, யாரிடம் சிக்கி உள்ளது, என்பதெல்லாம் வெளி உலகுக்கு தெரியாமலேயே போய்விட்டது.
இந்த விஷயத்துல கறார் தன்மையை உடனுக்குடனேயே வெளிப்படுத்தி இருந்தால் இன்னைக்கு இன்னொரு அக்கிரமம் நடந்திருக்காது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது. பாலியல் தொந்தரவு< அரசு கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு இந்த கும்பலில் உள்ள 2 பேர் வலை விரித்துள்ளனர். அவர்கள் பெயர் பைனான்சியர் ராஜா, அவரது நண்பர் வேலுமணி. செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு, இந்த பெண் பின்னாடியே போவதும், அசிங்கமாக பேசுவது என தொந்தரவு மேல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பயந்துபோன மாணவி வீட்டில் விஷயத்தை சொல்ல, அந்த பெண்ணின் பெற்றோர் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் சொன்னார். போலீசாரும், சம்பந்தப்பட்ட ராஜா, வேலுமணியை கைது செய்துவிட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போதுதான் பல திடுக் தகவல்கள் தெரியவந்துள்ளன.




கரும்பு தோட்டம்

இது மொத்தம் 4 பேர் கொண்ட கும்பல் என்று கூறப்படுகிறது. இவர்களின் டார்கெட் பள்ளி, காலேஜ் மாணவிகள்தான்! இதில் முக்கியமான ஹீரோதான் ராஜா. குள்ளக்கருப்பன் கோயில் பின்புற பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்துக்கு வரும் லவ் ஜோடிகளின் லீலைகளை மறைந்திருந்து வீடியோ எடுத்து கொள்வார்களாம்.



மிரட்டி வீடியோ

அதன்பிறகு இந்த 4 பேரில் ஒருவரான ராஜா, அந்த ஜோடியிடம் சென்று தன்னை போலீஸ் என்று அறிமுகப்படுத்தி வீட்டு அட்ரஸ் என்ன, அம்மா, அப்பா பேரு என்ன.. என்று மிரட்டி கேட்பாராம். இதில் அதிகமாக பயந்து நடுங்கும் பெண்கள் சிக்கி கொண்டால், அவர்களை அதே கரும்பு தோட்டத்திலேயே மிரட்டி சீரழித்து, அதையும் வீடியோவாக எடுத்து கொள்வது நடந்து வந்திருக்கிறது.



அதிர்ச்சி

இப்படி 100 ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரிய அதிர்ச்சியை தந்தாலும், போலீசார் விசாரணை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்

கருத்துகள் இல்லை: