வியாழன், 18 அக்டோபர், 2018

மாதவி .. சபரிமலை ஐயப்பனை இன்று தரிசித்த முதல் பெண் விடியோ 1991 இற்கு பின்பு மீண்டும் பெண்கள் தரிசனம்

tamil.samayam.com :புதிய வரலாற்றின் தொடக்கமா; சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்த முதல் பெண் மாதவி
 பத்தனமmதிட்டா: சபரிமலை கோவிலுக்குள் முதல் பெண் பக்தை நுழைந்ததாக கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து பெண்கள் பாதுகாப்பிற்காக உரிய வசதி செய்து தரப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்தது. இந்நிலையில் இன்று ஐப்பசி மாத பூஜைக்கான நடை திறக்கப்பட்டது. அதற்காக ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு வருகை புரிந்தனர்.


அவர்களில் பெண் பக்தர்களை தடுத்து நிறுத்த பல்வேறு போராட்டக் குழுவினர் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் ஐயப்பன் கோவிலுக்கு வந்த பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த சூழலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாதவி(40) என்ற பெண் சபரிமலைக்கு சென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: