
பட்டப்பகலில் நடந்த
இந்த சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இந்த
சம்பவத்தை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில்
பதிவிட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற பாதுகாவலர்,
நீதிபதிக்கே போன் செய்து துப்பாக்கியால் சுட்டதை கூறியிருக்கிறார்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தாய்- மகன் இருவரும் உடனடியாக
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை
அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரீத்து இன்று காலை
உயிரிழந்தார். துருவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள்
தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலரை போலீசார் கைது செய்தனர். இரண்டு ஆண்டுகளாக நீதிபதி வீட்டில் பாதுகாவலராக பணியாற்றிய அவர், நீதிபதி வீட்டில் உள்ளவர்கள் தன்னை மிகவும் மோசமாக நடத்தியதால் துப்பாக்கியால் சுட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார். போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக