புதன், 17 அக்டோபர், 2018

சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவுநக்கீரன் :சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரம், சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பதற்கு காங்கிரஸ், பா.ஜனதா எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. சபரிமலை அய்யப்பன் பக்தர்கள் போராட்டம் காரணமாக அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள் சபரிமலைக்கு செல்வதை பக்தர்கள் தடுத்து வருகிறார்கள். இதனால் போலீசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களிடம் இருந்து மீட்டு, பெண் பக்தர்கள் சிலர், போலீசாரின் கடும் பாதுகாப்பு வளையத்திற்கு இடையே சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆந்திராவை சேர்ந்த மாதவி என்ற 45 வயது பெண்ணின் குடும்பம் எதிர்ப்பை மீறி செல்ல முயன்றது. அவர்களை போலீசார் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களிடம் போகாதீங்க என பக்தர்களின் காலில் விழுந்து போராட்டக்காரர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.<
பக்தர்கள் போராட்டம் காரணமாக நிலக்கல், பம்பை , சன்னிதானம் உள்ளிட்ட 4 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது, இன்று இரவு முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்தநிலையில், சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.<
இது தொடர்பாக கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கூறியிருப்பதாவது:
சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கருத்துகள் இல்லை: