சனி, 22 செப்டம்பர், 2018

மும்பை தாராவியில் தமிழ் இளைஞன் அடித்து கொலை .. சிவசேனா அட்டகாசம்

தமிழ் வாலிபர் கொலை .. மீண்டும் ஒரு வரதராஜ முதலியார் தேவை, மும்பை
தமிழனின் பாதுகாப்புக்கு...
தாராவி லட்சுமி சாலில் வசித்துவந்த கேட்டரிங் வேலை செய்யும் தம்பி வினோத், இரவு பகல் என்று பாராமல் கடுமையாக உழைப்பவன், யார் வம்புக்கு போகதவன், 21/09/2018 அன்று மாலை 5.30 மணியளவில் தனது கேட்டரிங் வேலையாக 90 அடி சாலை காமராஜர் பள்ளி எதிரில் உள்ள கணபதி மண்டபம் அருகில் தனது மோட்டர் வாகனத்தில் செல்லும் பொழுது எதிராய் வந்த சிவசேனா முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ரவி கோடம் தம்பி நாகேஷ் என்பவன் நல்ல குடிபோதையில் மோட்டர் வாகனத்தில் வந்து இடித்துவிட்டு வினோத்தை மிக கொடூரமான முறையில் சரமாரியாக அடித்து அவர் உயிர்நாடியில் மிதித்து அவர் இறந்து போகும் அளவுக்கு மிக கொடூரமாக
தாக்கியதில் அவர் உயிர்இழந்தார்,
ஒரு தமிழனுக்கு மும்பையிலும் பாதுகாப்பு இல்லை, அதிகாரம் மற்றும் பதவி, பணம் இருக்கும் தைரியத்தில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், செய்கின்றார்கள், தாராவி காவல்துறை கொலை வழக்கு சரியானமுறையில் பதிவு செய்தார்களா என்ற சந்தேகம் உள்ளது...?

நாம் எல்லோரும் தமிழர்களாக ஒன்றிணைந்து தம்பி வினோத்துக்காக போராடுவோம், தமிழர்களாக கைகோர்ப்போம், அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்போம், குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவோம்........
தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் கட்சிகள், இயக்கங்கள் தங்கள் ஆதரவு தருமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்...
தம்பி வினோத்தை பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்...
கதிரவன் மும்பை

கருத்துகள் இல்லை: