ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

அமைச்சர் விஜயபாஸ்கர் காட்டி கொடுத்துவிடுவார் என்ற பயத்தில் பதவி கொடுத்த எடப்பாடி- பன்னீர்


மாலைமலர் :பதவி கொடுக்கவில்லை என்றால் காட்டிக் கொடுப்பார் என்ற
பயத்தால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதவி வழங்கப் பட்டுள்ளதாக துரைமுருகன் விமர்சித்துள்ளார். # : தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கேள்வி : தமிழகத்தில் தற்போது மின்தடை அதிகமாக உள்ளதே?
 பதில் : மின் தடையே இருக்காது என ஒரு அமைச்சர் சொல்லி உள்ளார். மற்றொருவர் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறுகிறார். முதலில் அமைச்சர்கள் உட்கார்ந்து நாட்டின் மின்சார நிலைமையை பேசிய பின்னர் மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும்
 கேள்வி : குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதே?
 ப : பதவி கொடுக்கவில்லை என்றால் யார்- யாரை காட்டிக் கொடுப்பார் என்ற பயத்தால் தான் அமைச்சருக்கு இந்த பதவி வழங்கப்பட்டு இருக்கலாம்
கே : இலங்கையில் இறுதிப் போரின் போது இந்திய அரசு உதவி செய்ததாக ராஜபக்சே கூறி இருக்கிறாரே?

ப : அதுபற்றி எனக்கு தெரியாது.
கே : 7 பேர் விடுதலையில் கவர்னர் காலதாமதம் செய்வதாக தகவல் வருகிறதே?
ப : தமிழக கவர்னர் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவில்லை என தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் துரைமுருகன் ஈரோட்டில் நடைபெறும் ம.தி.மு.க. மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார்.

கருத்துகள் இல்லை: