வெள்ளி, 21 செப்டம்பர், 2018

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 50 ஆண்டுகள் சிறை.. கடலூர்

Samayam Tamil : சிதம்பரம் அருகே 2 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு கடும் தண்டனை சிதம்பரம் அருகே 2 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இரண்டரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனிசாமி என்பவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.
கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட பழனிசாமிக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். பச்சிளம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த நபருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் அந்த நபருக்கு மரண தண்டனை விதித்திருக்கலாம் என்ற தங்களின் கருத்தையும் தெரிவித்து வருகின்றனர்.<

கருத்துகள் இல்லை: