வியாழன், 20 செப்டம்பர், 2018

நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதாவுக்கு எதிராக நடிகர் விஜயகுமார் போலீசில் முறையீடு

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியினரின் மகள் வனிதா. இன்று விஜயகுமார் தனது வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டு காலி செய்ய மறுப்பதாக கூறி தனது மகள் மீது போலீஸாரிடம் புகார் அளித்தார். நடிகர் விஜயகுமார் மஞ்சுளாவுக்கு பிறந்த வனிதாவுக்கு சொத்தில் போதிய பங்கை அளிக்காமல் தனது முதல் மனைவிக்கு பிறந்த நடிகர் அருண் போன்றோருக்கே கொடுத்துள்ளார். அருணை பெரிய நடிகராகக மஞ்சுளா சம்பாத்த சொத்துக்களை பெருமளவில் அள்ளி வீசியுள்ளார். இருந்தாலும் அவர் சினிமாவில் பெரிதாக வளரவில்லை.
விஜயகுமாருக்கு மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை சினிமா படப்பிடிப்பிற்காக வாடகைக்கு வழங்குவது வழக்கமானது. அதுபோல அவரது மகள் வனிதாவிற்கு படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டதாக தெரிகிறது.;

குறிப்பிட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னரும் வனிதா வீட்டை காலி செய்யவில்லை. இது குறித்து விஜயகுமார் தரப்பு அவரிடம் கேட்ட போது இது எனது சொத்து, வீட்டை காலி செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால், வேறுவழியின்றி நடிகர் விஜயகுமார், தனது வீட்டில் வசிக்கும் மகள் வனிதா, வீட்டை காலி செய்யாமல் சொந்தம் கொண்டாடுவதாகவும், அவரை வீட்டில் இருந்து காலி செய்து தர வேண்டும் எனவும் புகார் மனு அளித்தார்.
இதனால், செய்தியாளர்கள் இது குறித்து செய்தி சேகரிக்க ஆலப்பாக்கத்தின் வீட்டிற்கு சென்றனர். அப்போது வனிதா செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இது  குறித்து மதுரவாயல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வெப்துனியா

கருத்துகள் இல்லை: