புதன், 2 மே, 2018

நிர்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி- செருப்பு, கல் வீச்சு .. காவிரி மேலாண்மை வாரியும்.. அலட்சியமாக பதிலளித்த மத்திய அமைச்சர் ..

செய்தியாளர் சந்திப்பில் காவிரி விவாகரம் குறித்த கேள்விக்கு வழக்கம் போல அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.அதை தொடர்ந்து தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
tamiloneindia: ராமநாதபுரம்: காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனையில் அலட்சியமாக பதில் கூறியதாக ராமநாதபுரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுகவினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். மேலும் நிர்மலா சீதாராமன் கார் மீது செருப்புகளும் கற்களும் சரமாரியாக வீசப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க முயன்ற போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
விகடன் :அருண் சின்னதுரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்பட முடியாது'' என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ராமநாதபுரம் செல்வதற்காக விமானம்மூலம் இன்று மதுரை விமான நிலையம் வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "115 மாவட்டங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லத் தேவையான மத்திய அரசின் திட்டங்களான குடிநீர், சுகாதாரம், சாலை மற்றும் மின்சார வசதி உள்ளிட்டவை அந்த மாவட்டங்களுக்கு சென்று சேர்ந்திருக்கிறதா என்று ஆய்வுசெய்ய, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு வந்துள்ளேன்.
ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் 75 சதவிகிதம், பட்டியலின மக்கள் வசிக்கும் 36 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு மத்திய அரசு திட்டங்கள் சென்று சேர்ந்திருக்கிறதா? என்று ஆய்வுசெய்ய வந்திருக்கிறேன்.
தமிழகத்தை அறிந்த மத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாநில அரசின் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைவருடனும் கலந்து பேசி, அதை நீதிமன்றத்தில் சொல்லித்தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். இந்த விஷயத்தில், மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. 2007ல் இருந்து மத்திய-மாநில அரசுகளைக் கையில் வைத்திருந்த இன்றைய எதிர்க்கட்சியினர், கர்நாடகா தேர்தலை மனதில்வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாங்கள் காலம் தாழ்த்துவதாகச் சொல்வதில் உண்மையில்லை. அன்று, அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எந்தெந்தத் தேர்தல்களை எல்லாம் மனதில்வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருந்தார்கள் என நான் கேட்கவா? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தன்னிச்சையாகச் செயல்பட முடியாது.

பட்டாசு விபத்துகள் சமீப காலமாக அதிகரித்திருப்பதற்கு, மத்திய அரசின் கண்காணிப்புக் குறைபாடு என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மாநில அரசில், பட்டாசுத் தொழிலைக் கண்காணிக்க மற்றும் பட்டாசு விபத்துகளைத் தவிர்க்க, இருக்கக்கூடிய சம்பந்தப்பட்ட துறையினர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

கருத்துகள் இல்லை: