வியாழன், 25 மே, 2017

BBC : 8 நடிகர்கள் பிடியாணைக்கு எதிரான மனு தள்ளுபடி .. ..கண்டிப்பாக நீதிமன்றில் ...

பிடிவாரண்டிற்கு எதிராக தமிழக நடிகர்கள் தாக்கல் செய்த மனுவை உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களும் வரும் ஜூன் மாதம் 17 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் இன்றைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. நேற்று புதன்கிழமையன்று இந்த 8 நடிகர்கள் தரப்பிலான வழக்கறிஞர் விஸ்வநாத், உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கடந்த 23 ஆம் தேதி, செவ்வாய்கிழமையன்று, நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.

கருத்துகள் இல்லை: