வியாழன், 5 ஜனவரி, 2017

ராமராஜன் ,ஆனந்தராஜ் ,சுதீஷ் ,நாஞ்சில் சம்பத் ... தளபதி பஜனை ஆரம்பிச்சுட்டாய்ங்க?

முன்னாள் முதல்வர் ஜெ., இறந்த பின் சசிகலா தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்த நடிகர் வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்தார். அதிமுகவில் இருந்து நிறைய மிரட்டல் வந்தது.போலீஸ் பாதுகாப்பும் போடப் பட்டது. அதைத் தொடர்ந்து ஆனந்தராஜ் அமைதியாகி விட்டார். நாஞ்சில் சம்பத் வெளிப்படையாகவே கட்சியில் இருந்து விலகி விட்டார். இன்னோவா காரையும் ஒப்படைத்தது விட்டார். நடிகர் செந்தில் இன்னும் எந்த அறிக்கையும் விடாமல் அமைதி காத்து வருகிறார். விந்தியா விலகி விட்டார். ராமராஜன் மட்டும் அம்மா இறந்த துக்கத்தில் நெஞ்சுவலி வந்து ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் தளபதி நேற்று பொதுக்குழுவில் தலைவராக தேர்ந்தெடுத்து விட்டார். இதில் உற்சாகம் அடைந்த ராமராஜன் தளபதியே இனி தமிழ் நாடு என்று அறிவித்து திமுகவில் இணைகிறார் என்கிற செய்தியை ஒரு வார இதழ் எழுதியுள்ளது. ராமராஜன் இனி மேடைகளில் தளபதி புகழ் பாடுவார் என்று எதிர் பார்க்கலாம்

கருத்துகள் இல்லை: