இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கள் வீட்டில் மாட்டை வெட்டி அதன் இறைச்சியை வைத்திருந்த இக்லாக் குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவேண்டும் என காவல்துறையை கிராமமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டனர்.
இது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக சுற்றுவட்டார கிராமத்தின் ’மகா பஞ்சாயத்து’ பஞ்சாயத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. அசம்பாவிதங்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 144 தடை உத்தரவை கவுதம்புத் நகர் மாவட்ட ஆட்சியாளர் பிறப்பித்துள்ளார். இதனால் அந்த கிராமத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏறப்ட்டுள்ளது. மாலைமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக