திங்கள், 6 ஜூன், 2016

3 Admk காமுகர்கள் மாணவியை வன்புணர்வு....குற்றவாளிகளை பாதுகாக்கும் குறிஞ்சிப்பாடி போலீஸ்! அம்மா நாமம் A license to RAPE?

வாழ்க அம்மா நாமம்,  10-ம் வகுப்பு மாணவி மீது அ.தி.மு.க குண்டர்களின் பாலியல் வக்ரம் வீடுகள் சூறை – தீக்கிரைகடந்த சட்டமன்ற தேர்தலில் போலீஸ் அதிகாரவர்க்க கிரிமினல்கள், பணம் இவற்றின் பக்க பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ள அ.தி.மு.க குண்டர்கள் ஆங்காங்கே தங்களின் திருவிளையாடல்களை துவங்கி விட்டனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது தையல் குணாம்பட்டினம் காலனி. இங்கே ஒரு சலவைத் தொழிலாளி குடும்பம் – குடும்பத்தலைவர் ரவி, மனைவி சந்திரா, ஒரே மகள் ஜெயஸ்ரீ, மகள் நித்திஷ் கொண்ட ஒரு சிறிய குடும்பம்.
கடந்த 2016 மே 28 வியாழனன்று 10-ம் வகுப்பு தேர்வில் தான் தேர்ச்சி பெற்றதை சக மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தார் ஜெயஸ்ரீ.. அப்போது அதே ஊரைச் சேர்ந்த
1. மணிகண்டன் (திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர்)
2. செல்வகுமார் (திருமணமாகி 2 பெண்குழந்தைகள் உள்ளனர்)
3. வைரமுத்து
ஆகிய மூன்று உள்ளூர் அ.தி.மு.க ரவுடிகள் குடிபோதையில் ஜெயஸ்ரீயிடம் “இன்னாடி சிரிச்சி சிரிச்சி பேசுற”, “ஏங்கிட்ட வந்து பேசுடி” என்றும் இன்னும் சொல்லக் கூசும் ஆபாச வார்த்தைகளால் பேசி வக்கிரமாக நடந்து கொண்டனர்.

இந்த பொறுக்கிகளின் பொறுக்கித் தனத்தைக் கண்டு ஆத்திரம் கொண்டு சீறினார் இளம் மாணவி ஜெயஸ்ரீ. பொது இடத்தில் இவ்வக்கிரத்தை துணிச்சலுடன் தட்டிக் கேட்டதை சற்றும் எதிர்பாராத இம்மூவரும் அதிர்ச்சியடைந்தனர்.
நடந்த சம்பவத்தை அன்று இரவே தன் தாய் சந்திராவிடம் கூறியுள்ளார் ஜெயஸ்ரீ. போதையில் விடிய விடிய வெறிகொண்ட இந்த அ.தி.மு.க ரவுடி கும்பல் மறுநாள் காலையில் வெள்ளியன்று 11 மணியளவில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள ஜெயஸ்ரீ வீட்டை சுற்றி நோட்டமிட்டது. வீட்டில் ஜெயஸ்ரீ மட்டும் இருந்தார், வேறு யாருமில்லை,  தனது கூரை வீட்டிலிருந்து அருகாமையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அம்மா பசுமை வீட்டில் புத்தகத்துடன் படித்துக் கொண்டிருந்தார்.
இதனை பயன்படுத்தி, குடிவெறி தலைக்கேற முதல்நாள் அவமானத்தின் வெறியில் அம்மாவின் படம் வெளியில் சிரித்தபடியே இருக்க, மாணவி ஜெயஸ்ரீயிடம் அ.தி.மு.க குண்டர்கள் பாலியல் வெறி கொடுமைகளை அரங்கேற்றினர். இந்த மூன்று வெறிநாய்களிடம் சிக்கிய கோழிக் குஞ்சு போல மரணபயத்தில் சப்தம் போட்டு அலறினார் ஜெயஸ்ரீ. சப்தம் வெளியில் கேட்காமலிருக்க ஜெயஸ்ரீயின் வாயைப் பொத்தி கழுத்தை இறுக்கினார்கள் ரவுடிகள். மயங்கி சரிந்தார் இளம் சிறுமி ஜெயஸ்ரீ.
அலறல் கேட்டு ஓடி வந்த பொதுமக்களிடம் ஒன்றுமே நடக்காதது போல நாடகமாடினார்கள் அ.தி.மு.க குண்டர்கள். சற்று நேரத்தில் 100 நாட்கள் வேலைக்கு சென்ற பெற்றோர் தகவல் கேட்டு அலறி ஓடி வந்தனர், மகளின் நிலை கண்டு பதறினார்கள்.
உடன் குறிஞ்சிப்பாடி அரசு பொதுமருத்துவமனையில் ஜெயஸ்ரீ அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து கடலூர் மாவட்ட தலைமை அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கும் நிலைமை சரியில்லாததால் தற்போது புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார் ஜெயஸ்ரீ. நடந்த சம்பவத்திலிருந்து மீளமுடியாமல், சுயநினைவிழந்து, குரல்வளை நெறிக்கப்பட்டு, மூளைக்குச் செல்லும் நரம்பு தடைப்பட்டு போராடி வருகிறார்.
இந்நிலையில் ஜெயஸ்ரீயின் தந்தை ரவி அ.தி.மு.க கிரிமினல்கள் மீது புகார் கொடுக்கச் சென்றபோது அலைக்கழித்து திரும்பி அனுப்பியது குறிஞ்சிப்பாடி போலீஸ். புகாரை வாங்காமல் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று முயற்சித்தனர். இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினரும், ரவியின் உறவினரும், வழக்கறிஞருமான நெய்வேலி மணவாளன் ஆகியோர் போராடி புகார் மனு கொடுத்து வழக்கு பதிவு செய்தனர். இதனடிப்படையில் மணிகண்டன் என்பவனை மட்டும் கைது செய்தது போலீஸ். மற்ற இரு கிரிமினல்களையும் கைதுசெய்ய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் போது அப்பகுதி அ.தி.மு.க பிரமுகர் பாஷங்கி நாயுடு மூலம் ரூ 5 லட்சம் வரை பேரம் பேசி பணியவைக்க முயற்சித்தனர். பெற்றோர் உறுதியாக இருந்ததால் தோற்று ஓடிப் போனார்கள்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு 12 மணிக்கு ஜெயஸ்ரீ கூரை வீட்டை தீ வைத்துக் கொளுத்தினார்கள் அ.தி.மு.க குண்டர்கள். வீட்டிலிருந்து துணிமணிகள், பாத்திரம், உணவுப் பொருட்கள், புத்தகம், கட்டில், பீரோ அனைத்தும் தீயில் கருகின. ஆசை ஆசையாய் தனது மகளின் திருமணத்திற்கு எடுத்து வைத்திருந்த 10 பவுன் நகை, பணம் தீயில் எரிந்து சாம்பலாயின. “வீடும் போச்சு, பிள்ளையும் போச்சே, கடவுளே நாங்கள் என்ன பாவம் செய்தோம் கடவுளே!” என்று ஜெயஸ்ரீ பெற்றோர் கதறி அழுகிறார்கள்.
இச்சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. இதை பெற்றுக் கொண்டு எஃப்.ஐ.ஆர் போட்டுள்ள போலீஸ் வழக்கம் போல குற்றவாளிகளை தேடி வருவதாக புழுகிக் கொண்டு முன் ஜாமீன் எடுத்துக் கொளள வழிகாட்டியுள்ளது.
வியாழனன்று மதியம் பெயருக்காக வி.ஏ.ஓ விசாரணை நடத்திச் சென்றுள்ளார். இதுவரையில் ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி என்று எந்த உயரதிகாரிகளும் விசாரணைக்கு வரவில்லை.
ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட போலீஸ், பல இலட்சம் ராணுவம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் நீதிமன்ற அதிகார பரிவாரங்கள் இருந்தும் ஒரு சாதாரண சிறுமியைக் கூட பாதுகாக்க வக்கற்று தோற்றுப் போயுள்ளது இந்த சட்டமும் நீதியும் அரசும். இனி மாற்றுவழி மக்களே அதிகாரத்தை கையிலெடுத்து இக்கொடும் குற்றவாளிகளுக்கு மக்கள் மன்றத்தில் தீர்ப்பளிப்பதே ஒரே வழி.
தகவல்
மக்கள் அதிகாரம், கடலூர்
8110815963

கருத்துகள் இல்லை: