பள்ளியில் புதியதாக சேர வரும் குழந்தைகள் அனைவரும் பழங்கள்,கற்பூரம் என்று ஆசிரியர்களுக்குக் கொடுப்பது இங்கு வழக்கம். இந்நிலையில் நேற்று(வியாழன்) ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால் இனிமேல் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லி, அந்த சிறு தளிர்களின் காலில் கற்பூரத்தை வைத்து கொளுத்தியிருக்கிறார் ஆசிரியை வைஜெயந்திமாலா. வலி தாங்காமல் கதறிய அந்தப் பிஞ்சுகளிடம் வீட்டில் யாரிடமாவது சொன்னால் நாளைக்கும் இதே மாதிரிதான் நடக்கும் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்.
இந்நிலையில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் ஆசிரியை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். விசாரணைக்கு பின்னர் ஆசிரியை வைஜெயந்திமாலா கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தால் கிராமமே கொந்தளிப்பானதால் ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியர் வரதராஜன் இருவரையும் உடனே சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டிருக்கிறது கல்வித்துறை.
பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவரான அனிதா பேசும்போது, “நான் ஐந்தாம்
வகுப்பு படிக்கிறேன். நேற்று படிக்கவில்லை என்று சொல்லி என் காலில்
கற்பூரத்தை வைத்து கொளுத்துனாங்க. எனக்கு ரொம்ப வலிச்சதால அழுது
கத்தும்போது அது கீழ விழுந்துடுச்சி. உடனே இன்னொரு கால்ல வச்சி
கொளுத்தினாங்க. அப்புறம் அதுவும் கீழ விழுந்துடுச்சி. உடனே இத வீட்ல
யாருகிட்டயும் சொல்லக் கூடாதுனு டீச்சர் சொன்னதால நான் அப்பா, அம்மாகிட்ட
சொல்லல” என்கிறார் வலியில் துடித்தவாறு.
பிரச்னைகளை உடனே முடிவுக்குக் கொண்டுவர அரசின் அனைத்து துறைகளும் கையாள்வதே இப்படியான பணியிடை நீக்கம். ஆனால் இவர்கள் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கான சரியான தண்டனை என்பது பணி நீக்கமாகத்தான் இருக்க முடியும். கவனிக்குமா கல்வித் துறை?
ஜெ.முருகன்
பிரச்னைகளை உடனே முடிவுக்குக் கொண்டுவர அரசின் அனைத்து துறைகளும் கையாள்வதே இப்படியான பணியிடை நீக்கம். ஆனால் இவர்கள் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கான சரியான தண்டனை என்பது பணி நீக்கமாகத்தான் இருக்க முடியும். கவனிக்குமா கல்வித் துறை?
ஜெ.முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக