வியாழன், 10 மார்ச், 2016

பிரேமலதா: கூட்டணி பற்றி வெளியான தகவல்கள் எல்லாமே வதந்திகள்தான்...(அப்பாடா சு.சாமிக்கு தாங்க்ஸ்)

கூட்டணி பற்றி இதுவரை வெளியான தகவல்கள் அனைத்துமே வதந்திகள்தான்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக வெளியாகும் கருத்து கணிப்புகள் தவறானவை. சட்டமன்றத் தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் கருத்து திணிப்புகளாகவே உள்ளன. கூட்டணி பற்றி இதுவரை வெளியான தகவல்கள் அனைத்துமே வதந்திகள்தான். எந்த பேரத்திற்கும் படியாதவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். பால் கட்டணம் உயர்த்தப்பட்டதாலேயே அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது.

தேமுதிகவிற்கு முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட அதிமுக தயாரா. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் தமிழக அரசு மக்களை ஏமாற்றுகிறது. காவிரி, மீனவர், அரசு ஊழியர், செவிலியர் என எந்த பிரச்சையிலும் அதிமுக அரசு தீர்வு காணவில்லை. வெள்ள பாதிப்பு நிவாரணத் தொகை பலருக்கு வழங்கப்படவில்லை. வரும் தேர்தலில் அதிமுக அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.
தமிழகம் கடனில் தத்தளிப்பதுதான் அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனை என்றார்எனக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டாம்: எனக்கு எந்த குழப்பமும் இல்லை. தெளிவாகஇருக்கிறேன்: விஜயகாந்த் சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், என்னை கூட்டணிக்கு அழைத்த அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜயகாந்த்துக்கு பேச தெரியாது என்று எழுதுகிறார்கள். எனக்கு தெரியும் கட்சியை எப்படி கொண்டு போக வேண்டும் என்று. நீங்கள் யாரும் எனக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டாம்.
பத்திரிக்கை நண்பர்களை தரக்குறைவாக சொல்லவில்லை. பொதுவாக சொல்கிறேன். விஜயகாந்த் இன்று கூட்டணி குறித்து சொல்லுவாரா. ஏன் சொல்லவில்லை என்றால் என்ன. வழக்கம்போல குழப்பம்தான். எனக்கு எந்த குழப்பமும் இல்லை. தெளிவாக இருக்கிறேன். தேமுதிக சார்பில் போட்டியிடும வேட்பாளர்களை தேர்வு செய்ய இளங்கோவன், பார்த்தசாரதி, எல்.கே.சுதிஷ், சந்திரகுமார், ரவீந்திரன் உள்ளிட்ட 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.  nakkheeran,in

கருத்துகள் இல்லை: