வியாழன், 10 மார்ச், 2016

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கருக்கு ஐந்து கோடிரூபாய் அபராதம்...பசுமை தீர்ப்பாயம் Art of Living அமைப்பு மீது கடும் கண்டனம்


வாழும் கலை அமைப்புக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு டெல்லி யமுனை ஆற்றங்கரையில் தற்காலிக கட்டுமானங்கள் எழுப்பி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த வாழும் கலை அமைப்புக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு, உலகப் பண்பாட்டு திருவிழா என்ற பெயரில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஏற்று, 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது. அந்தக் குழு வாழும் கலை அமைப்புக்கு 120 கோடி ரூபாய் அபராதம் விதிக்க பரிந்துரைத்தது. இதுகுறித்த விசாரணையின்போது, வாழும் கலை அமைப்புக்கு 5 கோடி ரூபாயும், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்த பசுமைத் தீர்ப்பாயம், உலக பண்பாட்டு திருவிழா நடத்த அனுமதி அளித்தது nakkheeran.in

கருத்துகள் இல்லை: