வியாழன், 10 மார்ச், 2016

விஜயகாந்த் : இப்ப தெளிவாக சொல்கிறேன் தனியாகத்தான் தேர்தலை சந்திக்க போகிறேன்.....

இதுவரை தான் தெளிவாக இல்லை என்பதை ஒரு ஒப்புதல் வாக்குமூலமாக தருகிறாரோ? விஜயகாந்த் :  தனியாகத்தான் தேர்தலை சந்திக்கப்போகிறேன்: தெளிவாக சொல்கிறேன்: விஜயகாந்த் பேச்சு சென்னை ராயப்பேட்டை தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், என்னை கூட்டணிக்கு அழைத்த அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விஜயகாந்த்துக்கு பேச தெரியாது என்று எழுதுகிறார்கள். எனக்கு தெரியும் கட்சியை எப்படி கொண்டு போக வேண்டும் என்று. நீங்கள் யாரும் எனக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டாம். பத்திரிக்கை நண்பர்களை தரக்குறைவாக சொல்லவில்லை. பொதுவாக சொல்கிறேன். விஜயகாந்த் இன்று கூட்டணி குறித்து சொல்லுவாரா. ஏன் சொல்லவில்லை என்றால் என்ன. வழக்கம்போல குழப்பம்தான்.பிரேமா ஒரு பக்கம் இழுக்கிறா சு சுவாமி ஒருபக்கம் இழுக்கிறா மத்தவங்களும் இழுக்கிறாங்க எனக்கு....நான் என்ன சொல்றது....ஆங் நான் சொல்லவாறது என்ன்னனனா.....தன்னன்னா தன்னா   
எனக்கு எந்த குழப்பமும் இல்லை. தெளிவாக இருக்கிறேன். தேமுதிக சார்பில் போட்டியிடும வேட்பாளர்களை தேர்வு செய்ய இளங்கோவன், பார்த்தசாரதி, எல்.கே.சுதிஷ், சந்திரகுமார், ரவீந்திரன் உள்ளிட்ட 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் தனியாகத்தான் தேர்தலை சந்திக்கப்போகிறேன். தெளிவாக சொல்கிறேன் என்றார்.nakkheeran,in

கருத்துகள் இல்லை: