ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட மகன்..அமெரிக்காவில் வழக்கை சந்திக்கும் இந்திய தம்பதிகள்

A California couple is currently in the midst of a legal battle over their autistic son, whom neighbors blame for lowering the value of their Silicon Valley homes.A lawsuit filed by the neighbors of Vidyut Gopal and Parul Agrawal
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட மகனின் நடவடிக்கையால் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் வித்யுத் கோபால்- பாருள் அகர்வால் தம்பதியரின் மகன் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டுள்ளான். இவன் பக்கத்து வீடுகளில் வசிக்கும் குழந்தைகளின் தலை முடியை இழுப்பது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இது பொதுமக்களுக்கு தொல்லை தருவதாக இருப்பதால் நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனால் மற்றவர்கள் தாக்கப்படவோ அல்லது பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி கோபால்- பாருள் அகர்வால் தம்பதியருக்கு உத்தரவிட்டார். இதனால் அவர்கள் 7 ஆண்டுகாளாக வசித்துவந்த வீட்டை காலி செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை விசாரனைக்கு வரும் நிலையில், இந்த விவாகரம் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. அவர்களில் பலர் கோபால்- பாருள் அகர்வால் தம்பதியருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் maalaimalar.com

கருத்துகள் இல்லை: