உண்மையில் சித்ரா இதுபற்றி என்ன பேசினார்?
கேரள சுற்றுலாத்துறை சார்பாக திருவனந்தபுரத்தில் ஓணம் பண்டிகைக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் சித்ரா கலந்துகொண்டார். அவரிடம் மலையாளத் திரையுலகில் மற்ற மொழிப் பாடகர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த சித்ரா, ஸ்ரேயா கோஷல் போன்ற திறமையான பாடகிக்கு மலையாளப் படங்களில் வாய்ப்பு கொடுத்தால் யாரும் புகார் சொல்லமாட்டார்கள். அதேசமயம், கேரளாவில் உள்ள திறமையான பாடகர்களுக்கும் சம அளவில் வாய்ப்பளிக்கவேண்டும். உண்மையில் கேரளாவில் மற்ற மொழிப் பாடகர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு போல, கேரளப் பாடகர்களுக்கு மற்ற மாநிலங்களில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றார். dinamani.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக