சனி, 29 ஆகஸ்ட், 2015

நடிகர் சங்க தேர்தல் விஷால் அணி வெற்றியை நோக்கி?

நடிகர் சங்க நிர்வாகம் பற்றி நாங்கள் கேள்வி எழுப்பினோம். அதன்காரணம் இப்போது எல்லோருக்கும் தெரியவந்திருக்கும். என நம்புகிறேன். சிவாஜிகணேசன் இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்உதாரணமாக இருந்தவர். அவருக்கு மணிமண்டபம் கட்டப்படுவது அனைத்து நடிகர்-நடிகைகளினுடைய விருப்பம். இந்த மணிமண்டபத்தை கட்டுவதற்கு காலதாமதம் செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. இளம் நடிகர்களை கொண்டு நாங்கள் கலைநிகழ்ச்சிகள் மூலமும் கூட நிதி திரட்டி மணிமண்டபம் கட்டியிருப்போம் அதை செய்யவில்லை. ஆனாலும், இப்போது தீர்வு கிடைத்துள்ளது இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி.

 நடிகர் சங்க தேர்தல் அரசியல் சார்ந்து நடக்கவில்லை. குஷ்பு, விவேக், மனோபாலா என்று தனிப்பட்ட முறையில் பலர் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதனால் நாங்கள் எல்லா உறுப்பினர்களையும் ஓட்டுப்போட அழைத்திருக்கிறோம். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், சச்சு என பலரும் நடிகர் சங்கத்தை கட்டிக்காத்தனர். நடிகர் சங்க இடம் 19 கிரவுண்டு இப்போது காலியாக கிடக்கிறது. நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம், நடிகர் சங்க கட்டிடத்தையும் கட்டுவோம். நான் நடித்த ‘பாயும் புலி’ படத்துக்கு தடை போட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். தயாரிப்பாளர் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். சுமுக தீர்வு ஏற்படும். பேட்டியின்போது, நடிகர்கள் கார்த்தி, நாசர், பொன்வண்ணன், நடிகை குட்டி பத்மினி ஆகியோர் உடன் இருந்தனர். nakkheeran.in 

கருத்துகள் இல்லை: