வியாழன், 27 ஆகஸ்ட், 2015

மதிமாறன்:இந்திய முஸ்லிம்களுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார் அப்துல்கலாம்.

இந்திய முஸ்லிம்களுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார் அப்துல்கலாம்.
ஒரு முஸ்லிம் உண்மையான இந்தியனாக இருக்க வேண்டுமென்றால் பகவத்கீதையைக் கொண்டாட வேண்டும். இந்து சாமியார்களை வழிபடவேண்டும். வேதங்களைப் போற்ற வேண்டும்.
‘நான் சைவம்’ என்று சொல்வதின் மூலமாக ‘மாட்டுக்கறி சாப்பிடுகிற முஸ்லிம் அல்ல’ என்பதை மறைமுகமாக வெளிபடுத்தி ‘பசுப் புனிதம்’ என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
‘அப்துல்கலாமை பார்த்தவது இங்கிருக்கும் முஸ்லிம்கள் திருந்துங்கள்’ என்று இந்து அமைப்புகள் இனி அறிவுரை சொல்லும், எச்சரிக்கும் பிறகு மிரட்டும்.
அப்துல்கலாமை எந்த அளவிற்குக் கொண்டாடுகிறார்களோ அந்த அளவிற்கு இஸ்லாமியர்களுக்கு இருக்கிறது….
விழித்துக் கொள்ளுங்கள் இஸ்லாமியர்களே, ‘முற்போக்காளர்களே’
ஒரு பேராபத்து இந்திய முஸ்லிம்களை அன்போடு அழைக்கிறது..
வரும் தேர்தலில் கலாமும் இந்து அமைப்புகளும் காட்டுவார்கள் தங்கள் பேரன்பை.

காத்திருக்கிறது கருணையோடு கல்லறைகள். அப்துல்கலாம் அழைக்கிறார்.
கனவின் ரகசியம்…
*
முஸ்லிம்களை விடுங்கள், அப்துல்கலாம் வாழ்ந்த ராமேஸ்வரம் பகுதியில் அவர் குடும்பத்தைப் போலவே ஒரே வர்க்க நிலையில் வாழ்ந்த ‘இந்து‘ மீனவர், தாழ்த்தப்பட்டவர் கடவுள்களைப் பொருட்டாக மதிக்காமல்;
சாமியார்களில் கூட மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாமியார்களை அலட்சியப்படுத்தி;
பார்ப்பன-பணக்கார கடவுள்கள், சாமியார்களின் பக்தராக அடையாளப்படுத்திக்கொண்டதில் இருக்கிறது ‘கலாம் கண்ட கனவின் ரகசியம்’
அதே ரகசியத்தில் தான் இருக்கிறது, இந்து அமைப்புகள் ‘தேசபக்தியின் மறுபெயர் கலாம்’ என்பதின் சூட்சம்.

ஜெயேந்திரனுக்கு மாற்று பங்காரு கிடையாது. ஆனால், ஜெயேந்திரனை வணங்குகிற பார்ப்பனர்கள் ‘பங்காரு’ வை வேடிக்கை பார்க்கிற ஒரு ‘கங்காரு’ வாகக் கூட மதிப்பதில்லை.
இந்து சாமியார்களின் ‘காலடி’யில் வீழ்ந்து வணங்கிய ‘மரியாதை’க்குரிய அப்துல் கலாம் அவர்கள் பங்காருவை பத்து பைசாவிற்குக்கூட மதித்ததில்லை.
பங்காரு ‘அடிகள்’ இந்து இல்லையா? சாமியார் இல்லையா? ஏன் கலாமுக்கு பங்காரு ஒரு இந்து கணக்காகவே தெரியாம போச்சு.
நான் மதத்தை, கடவுளை, வழிபாட்டு முறையை ஆதரிக்கிறவன் இல்லை; அதை விமர்சிக்கிறவனும் முற்றிலுமாகப் புறக்கணிக்கிறவனும் கூட.
ஆனால், அப்துல்கலாம் குரானை தீவிரமாக நம்பிய இஸ்லாமியராக வாழ்ந்திருந்தாலே அவருடைய வாழ்க்கை முற்போக்கானதாக இருந்திருக்கும்.
  mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: